June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு கொரோனா; அமிதாப்பச்சன் டிஸ்சார்ஜ்

1 min read
Corona to Home Minister Amit Shah; Amitabh Bachchan discharge

2-8-2020

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் டில்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் அமிதாப்பச்சன் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

அமித்ஷா

இந்தியாவில் கொரோனா முக்கிய பிரமுகர்களையும் தாக்கி வருகிறது. உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது இப்போது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தியில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியிருப்ப
தாவது :-
கொரோனாவின் ஆரம்ப அறிகுறிகளைப் பெற்றவுடன், சோதனை செய்து பார்த்தேன். பரிசோதனை அறிக்கை பாசிட்டிவ் ஆக வந்தது. எனது உடல்நிலை நன்றாக உள்ளது, ஆனால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறேன். கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும் தயவுசெய்து உங்களை தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

அமிதாப்பச்சன்

கொரோனா காரணமாக ஆஸ்பத்திரியில் இருந்த இந்தி நடிகர் அமிதாப் பச்சன் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் கொரோனா காரணமாக ஜூலை 11-ம் தேதி இரவு மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதே ஆஸ்பத்திரியில் அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக் பச்சனும் கொரோனாவுக்கு அனுமதிக்கப்பட்டார்.

அதற்கு அடுத்த சில நாட்களிலேயே அபிஷேக்பச்சனின் மனைவியான நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அவர்களும் சிகிச்சைக்காக அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

ஐஸ்வர்யாவும், ஆரத்யாவும் குணமடைந்து சமீபத்தில் வீடு திரும்பினர். தொடர்ந்து அமிதாப்பும், அபிஷேக்கும் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்தனர்.

இந்நிலையில் தற்போது அமிதாப்பச்சன் பூரண குணமடைந்து ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பியுள்ளார். இதனை அவரது மகன் அபிஷேக் பச்சன் அதிகாரப்பூர்வமாக சமூகவலைதளம் மூலம் அறிவித்துள்ளார்.வீடு திரும்பிய அமிதாப்பச்சன் ஓய்வில் இருந்து வருவதாக அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

ஆனால் அபிஷேக் மட்டும் தொடர்ந்து ஆஸ்பத்திரியில்
தங்கி கொரோனா சிகிச்சை பெற்று வருகிறார்.

அமிதாப் நன்றி

அமிதாப்பச்சன் சமூகவலைதளத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், ”இன்று(ஞாயிற்றுக்கிழமை) எனக்கு கொரோனா பரிசோனை மேற்கொண்டனர். அதில் நெகட்டிவ் என வந்தது. இதனால் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பிவிட்டேன். எனது அறையில் சில நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள உள்ளேன். கடவுளின் அருளாலும், அன்பான நண்பர்கள், ரசிகர்களின் வேண்டுதல் மற்றும் மருத்துவமனையில் என்னை நன்றாக பார்த்துக் கொண்ட டாக்டர்கள், செவிலியர்களால் தான் குணமாகி உள்ளேன். உங்கள் அனைவருக்கும் எனது இருகரம் கூப்பி நன்றி சொல்கிறேன்” என்று கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.