கொரோனாவுக்கு உத்தரபிரதேச பெண் மந்திரி பலி
1 min read
UP minister Kamala Rani varun death for corona
2-8-2020
உத்தரபிரதேச மாநில பெண் மந்திரி கொரோனாவுக்கு உயிரிழந்தார்.
மந்திரி
இந்தியாவில் கொரோனா பரவல் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோனா சாதாரண மக்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை பாகுபாடிறின்றி எல்லோரையும் தாக்குகிறது. இப்போது உத்தரபிரதேச மாநில பெண் மந்திரி ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.
அவரது பெயர் கமலா ராணி வருண்(வயது 62). உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் மந்திரி சபையில் தொழில்நுட்ப கல்வி மந்திரியாக இருந்து வந்தார்.
கடந்த ஜூலை 18-ந் தேதி இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளித்துவந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதனால் செயற்கை சுவாசம் மற்றும் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்றார்.
மரணம்
இந்த நிலையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.
மந்திரி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து முதல்-மந்தரி யோகி ஆதித்யநாத் இன்று அயோத்தி செல்ல இருந்த பயணத்தை ரத்து செய்தார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மந்திரி கமலா ராணி வருணின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் திறம்பட பணியாற்றினார். அவர் பிரபல தலைவராகவும், சமூக செயற்பாட்டளாராகவும் இருந்தார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.