இந்தியாவில் ஒரே நாளில் 2,972 பேருக்கு கொரோனா; 771 பேர் சாவு
1 min read
All over India 2.972 person affected for corona and 771 death one day
3-8-2020
இந்தியாவில் ஒரே பேருக்கு 2,972 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப் பட்டுள்ளது. 771 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
கொரோனா
இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் கொரோனா முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. கொரோனா பாதிப்பு பற்றி தினமும் காலையில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று (திங்கட்கிழமை) வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் 52,972 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 18,03,695 ஆக உயர்ந்துள்ளது.
771 பேர் சாவு
நேற்று மட்டும் கொரோனாவுக்கு 771 பேர் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து மொத்தம் 38,135 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோானா பாதிக்கப்பட்டவர்களில் 11,86 லட்சம் பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 5 லட்சத்து 79 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.