June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

ஒரு மாநிலத்தின் மீதும் மத்திய அரசு எந்த மொழியையும் திணிக்காது ; மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் கூறுகிறார்

1 min read
 Central Government does not impose any language on a State; Says Union Minister Ramesh Pokri

3-8-2020

மாநிலத்தின் மீது எந்த ஒரு மொழியையும் மத்திய அரசு திணிக்கது என்று மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.

புதிய கல்விக் கொள்கை

புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. இதற்கு தமிழ்நாட்டில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தி மொழியை திணிக்கும் முயற்சி என்று குற்றம் சாட்டினர். தி.மு.தி. தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் குலக்கல்வி முறையை கொண்டுவரும் முயற்சி என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இதுபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசு தரப்பில் இருந்து பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், கல்விக்கொள்கை குறித்து பிரதமர் மோடி பேசிய உரையின் தமிழாக்க வீடியோவை பதிவிட்டு இருந்தார். மேலும் அதில் தேசம் வெல்ல தேசிய கல்விக்கொள்கை என்று குறிப்பிட்டு இருந்தார்.

திணிக்காது

மத்திய மந்திரி மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் இதனை சுட்டிக் காட்டி தன்னுடைய ‘டுவிட்டர்’ பக்கத்தில் தமிழில் கருத்துகளை பதிவு செய்து உள்ளார். அதில் அவர், ‘பொன்.ராதாகிருஷ்ணன்ஜி, தமிழ்நாட்டில் தேசிய கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான உங்கள் வழிகாட்டலை எதிர்பார்க்கிறோம். மத்திய அரசு, எந்த ஒரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.