தமிழகத்தில் கொரோனா பாதிப்பை விட டிஸ்சார்ஜ் அதிகரிப்பு
1 min read
Increased discharge than corona effect in Tamil Nadu
3-8-2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,609 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று மட்டும் 5,800 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் இன்று சற்று குறைந்து உள்ளது. அதேபோல் கொரோனா தொற்றைவிட குணமாகி டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று((திங்கட்கிழமை) 5,609 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,577 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 32 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,63,222 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 122 ஆய்வகங்கள் மூலமாக, இன்று மட்டும் 58,211 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனையும் சேர்த்து, இதுவரை 28 லட்சத்து 37 ஆயிரத்து 273 மாதிரிகள் சோதனையிடப்பட்டன
இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில், 3,295 பேர் ஆண்கள், 2,314 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,59,435 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,03,760 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 27 ஆகவும் உள்ளது.
டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று (திங்கட்கிழமை ) மட்டும் 5,800 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதனால், இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 02 ஆயிரத்து 283 ஆக உள்ளது.
இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,222 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன் மூலம் சென்னையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 88,826 ஆக உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று காஞ்சிபுரத்தில் 528 பேரும், செங்கல்பட்டில் 438 பேரும், திருவள்ளூரில் 337 பேரும், விழுப்புரத்தில் 250 பேரும், வேலூரில் 246 பேரும், விருதுநகரில் 238 பேரும், தூத்துக்குடியில் 227 பேரும், கடலூரில் 216 பேரும், திருநெல்வேலியில் 211 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
தற்போது 56,698 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 13 ஆயிரத்து 44 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 2 லட்சத்து 17 ஆயிரத்து 207 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 32 ஆயிரத்து 971 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில்….
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,021 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் மட்டும் இதுவரை 1,02,985 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, ராணிப்பேட்டையில் 382 பேருக்கும், விருதுநகரில் 348 பேருக்கும், திருவள்ளூரில் 332 பேருக்கும், செங்கல்பட்டில் 331 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 322 பேருக்கும், தேனியில் 305 பேருக்கும், கோவையில் 227 பேருக்கும், கன்னியாகுமரி, தூத்துக்குடியில் தலா 215 பேருக்கும், திருவண்ணாமலையில் 212 பேருக்கும், திருநெல்வேலியில் 85 பேருக்கும் தென்காசியில் 75 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
109 பேர் சாவு
இன்று மட்டும் கொரோனா பாதித்த 109 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 86 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 23 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆவர். இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்களி எண்ணிக்கை 4,241 ஆக அதிகரித்துள்ளது.
இன்று சென்னையில் 20 பேரும், விருதுநகரில் 9 பேரும், கோவையில் 7 பேரும், காஞ்சிபுரம், சிவகங்கை, தென்காசி, தேனி, திருநெல்வேலியில் தலா 5 பேரும், செங்கல்பட்டு, மதுரை, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, தூத்துக்குடியில் தலா 4 பேரும், கன்னியாகுமரி, சேலத்தில் 3 பேரும், பெரம்பலூர், ராமநாதபுரம், தஞ்சாவூரில் தலா 2 பேரும், திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாகப்பட்டினம், திருப்பத்தூர், திருப்பூர், வேலூர், விழுப்புரத்தில் தலா ஒருவரும் என 109 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.