தமிழகத்தில் ஒரேநாளில் 5,135 பேருக்கு கொரோனா; டிஸ்சார்ஜ் 6,031
1 min read
Corona for 5,135 people in one day in Tamil Nadu; Discharge 6,031
5-8-2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,135 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இன்று மட்டும் 6,031 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
5,135 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா தொற்று பற்றி தினமும் மாலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று ( புதன் கிழமை) தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல் வருமாறு:-
தமிழகத்தில் இன்று(புதன்கிழமை) மட்டும் 5,175 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களில் 5,135 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 40 பேர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,73,460 ஆக உயர்ந்துள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,033 பேர் ஆண்கள், 2,142 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,65,509 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,07,924 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 27 ஆகவும் உள்ளது.
சென்னையில்…
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,044 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 1,05,004 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர இன்று செங்கல்பட்டில் 487 பேருக்கும், திருவள்ளூரில் 472 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 342 பேருக்கும், தேனியில் 278 பேருக்கும், வேலூரில் 179 பேருக்கும், கன்னியாகுமரியில் 175 பேருக்கும், தூத்துக்குடியில் 173 பேருக்கும், கடலூரில் 170 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. தென்காசியில் 121 பேருக்கும் திருநெல்வேலியில் 26 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறிப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் உள்ள 125 ஆய்வகங்களில் இன்று மட்டும் 61,166 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 29 லட்சத்து 53 ஆயிரத்து 561 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 6,031 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 14 ஆயிரத்து 815 ஆக உள்ளது.
இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்களில் அதிகபட்சமாக சென்னையில் 997 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதனையும் சேர்த்து சென்னையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 90,966 ஆக உயர்ந்துள்ளது.
செங்கல்பட்டில் 460 பேரும், விருதுநகரில் 454 பேரும், காஞ்சிபுரத்தில் 359 பேரும், திருவள்ளூரில் 357 பேரும், தூத்துக்குடியில் 311 பேரும், தேனியில் 294 பேரும், ராணிப்பேட்டையில் 258 பேரும், மதுரையில் 235 பேரும் இன்று டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
112 பேர் சாவு
கொரோனா பாதித்தவர்களில் இன்று மட்டும் 112 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 84 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 28 பேர் தனியார் ஆஸ்பத்தரிகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆவர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 4,349 ஆக அதிகரித்துள்ளது.
இன்று இறந்தவர்களில் சென்னையில் மட்டும் 25 பேர். மேலும் கடலூரில் 9 பேரும், செங்கல்பட்டு, தேனி, வேலூரில் தலா 7 பேரும், காஞ்சிபுரம், மதுரை, திருவள்ளூரில் தலா 6 பேரும், கோவையில் 5 பேரும், ராணிப்பேட்டையில் 4 பேரும், சிவகங்கை, திருவண்ணாமலை, திருநெல்வேலியில் தலா 3 பேரும், அரியலூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, சேலம், தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவாரூர், திருச்சியில் தலா 2 பேரும், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், தூத்துக்குடி, திருப்பூர், விழுப்புரத்தில் தலா ஒருவரும் இறந்துள்ளனர்.
தற்போது பல்வேறு ஆஸ்பத்திரிகளில் 54,184 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 13 ஆயிரத்து 520 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 2 லட்சத்து 25 ஆயிரத்து 606 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 34 ஆயிரத்து 334 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.