மாடல் அழகி ஐ.ஏ.எஸ். தேர்வில் சாதனை
1 min read
Model Beauty IAS Exam achievement
5-8-2020
ஐ.ஏ.எஸ். தேர்வில் மாடல் அழகி ஐஸ்வர்யா ஷியோரன், 93-வது ரேங்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
மாடலிங் அழகி
ராஜஸ்தானை சேர்ந்தவர் ஐஸ்வர்யா ஷியோரன். இவர் டெல்லியில் உள்ள ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியில் பொருளாதாரம் படித்து பட்டம் பெற்றார். அதன் பிறகு, இந்தூர் ஐ.ஐ.எம்-மில் முதுகலைப் பட்டம் பெற்றார். கல்லூரி காலத்திலிருந்தே மாடலிங்கில் ஈடுபட்டு வருகிறார்.
2015-ம் அண்டு நடைபெற்ற டெல்லி பிரஷ் ஃபேஸ் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற்றார். 2016-ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா அழகிப் போட்டியின் இறுதி போட்டி வரை வந்தார்.
மாடலிங் துறையில் பணிபுரிந்து வந்தாலும் ஐஸ்வர்யா ஷியோரனுக்கு ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி அரசுப் பணிக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தார். அதற்காக கடந்த 10 மாதங்களாகத் கடுமையாக பயிற்சி எடுத்தார். ஆனால் இதற்காக எந்த தனிப்பயிற்சி வகுப்புகளுக்கும் செல்லவில்லை. வீட்டிலேயே இருந்து அவரே படித்தார்.
சாதனை
இந்த முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது, நேற்று வெளியான சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவில் ஐஸ்வர்யா ஷியோரன் 93-வது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றது குறித்து ஐஸ்வர்யா ஷியோரன் கூறியதாவது:-
ஐஸ்வர்யா ராய்க்குப் பிறகு நானும் மிஸ் இந்தியாவாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். மிஸ் இந்தியா போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறினேன். ஆனாலும் சிவில் சர்வீஸ் தேர்வு பாஸாக வேண்டுமென்பது என் கனவு.
தொடர்ந்து சிவில் சர்வீசஸ் தேர்வுக்குத் தயாரானேன். இதற்காக நான் எந்தவித பயிற்சி வகுப்புகளுக்கும் செல்லவில்லை. செல்போன், சமூக வலைத்தளங்கள் என அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு தீவிரமாகப் படித்தேன். எளிதில் வெற்றி பெற்றுவிட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.