குஜராத்தில் கொரோனா ஆஸ்பத்திரியில் தீவிபத்து ; 8 பேர் சாவு
1 min read
Fire at Corona Hospital in Gujarat; 8 people killed
6-8-2020
குஜராத்தில் உள்ள கொரோானா ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் இறந்துள்ளர்.
தீ விபத்து
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நவ்ரங்பூரா பகுதியில் உள்ள ஷீரா ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த ஆஸ்பத்திரியில் இன்று காலை தீவிபத்து ஏற்பட்டது. ஒரு இடத்தில் பற்றிய தீ அடுத்தடுத்து பல அறைகளுக்கும் பரவியது. இதுபற்றிய தகவல் கிடைத்தும் , தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
8 பேர் சாவு
இந்த தீவிபத்தில் 8 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது.