நடிகர் சுஷாந்த்த சிங் தற்கொகை்கும் எனக்கும் எந்த தொடர்பு இல்லை; மந்திரி ஆதித்ய தாக்கரே
1 min read
“I have nothing to do with the suicide of actor Sushant Singh”; Minister Aditya Thackeray
6-8-2020
இந்த நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மந்திரி ஆதித்ய தாக்கரே கூறியுள்ளார்.
நடிகர் தற்கொலை
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி மும்பை பாந்தி்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 34 வயது வயதான இவர் சினிமா தொழில் போட்டி காரணமாக இந்த தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. இது பற்றி மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுஷாந்த் சிங்கிற்கு ரியா சக்ரபோர்த்தி என்ற காதலி இருந்தார். ரியா சக்ரபோர்த்தி நடிகை ஆவார். ரியா சக்ரபோர்த்திதான் சுஷாந்தை தற்கொலைக்கு தூண்டியதாக பீகாரில் வசித்து வரும் சுஷாந்த் சிங்கின் தந்தை பாட்னா போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து இந்த வழக்கு பற்றி ஒவ்வொரு நாளும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகிறது.
வழக்கை விசாரிப்பது யார் என்பதில் மராட்டியம் மற்றும் பீகார் மாநில அரசுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில், மராட்டிய அரசு முட்டுக்கட்டை போடுவதாக பீகார் அரசு குற்றம் சாட்டியது. எனவே வழக்கை அதிரடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்தது.
மராட்டிய மாநில முன்னாள் முதல்-மந்திரியும், பாரதீய ஜனதா எம்.பி.யுமான நாராயண் ரானே, சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும், இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மந்திரிக்கு தொடர்பா?
மராட்டிய மாநில முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் மகனும், மாநில சுற்றுச்சூழல் மந்திரியுமான ஆதித்ய தாக்கரேவுக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பான தகவல்கள் வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஆனால் மந்திரி ஆதித்ய தாக்கரே தன் மீதான குற்சாட்டை மறுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
இந்தி திரையுலகம் மும்பையின் ஒரு அங்கமாகும். இது ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரமாக விளங்குகிறது. சினிமா தொழில் துறையை சேர்ந்த சிலருடன் எனக்கு தனிப்பட்ட உறவுகள் உள்ளன. இது எந்த வகையிலும் குற்றம் இல்லை.
பழிபோட முயற்சி
இதை வைத்து என்மீது பழிபோட முயற்சி செய்வது வேதனை அளிக்கிறது. நான் பால்தாக்கரேயின் பேரன். தாக்கரே குடும்பத்திற்கு தீங்கு விளைவிக்கும் எந்த செயலையும் ஒருபோதும் செய்ய மாட்டேன்.
என் மீது பழிபோடுவது மிகவும் மலிவான மற்றும் அழுக்கு அரசியல். எங்களின் அரசியல் வெற்றியை சிலரால் ஜீரணிக்க முடியவில்லை. அவர்களில் வயிற்றெரிச்சலும், விரக்தியும் தான் தற்போது குற்றச்சாட்டாக மாறியுள்ளது.
ஒருவரின் மரணத்தில் இருந்து அரசியல் செய்வது மனிதாபிமானத்திற்கு எதிரானது. இந்த வழக்கில் எனக்கு எந்த வகையிலும் சம்பந்தம் இல்லை.
இந்த குற்றச்சாட்டை வைத்து என்மீதும் எனது குடும்பத்தின் மீதும் அவதூறு பரப்பலாம் என்ற மாயையில் யாரும் இருக்கவேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலாளர் தற்கொலை
இதற்கிடையே சுஷாந்த் சிங் மேலாளராக பணியாற்றிவந்த திஷா செலியன் கடந்த ஜூன் 8-ந் தேதி, மும்பை மலாடில் உள்ள ஒரு கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது.
இவரது தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக பா.ஜனதா தலைவர் நாராயண் ரானே குற்றம் சாட்டினார். மேலும் அவரது இறப்பு குறித்து பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களிலும் உலவி வருகின்றன.
திஷா செலியர் தற்கொலை குறித்து ஏதேனும் தகவல்களோ, ஆதாரங்களோ இருந்தால் சமர்ப்பிக்குமாறு மும்பை போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.