தமிழ்நாட்டில் 43 டாக்டர்கள் கொரோனாவுக்கு இறந்தவர்கள் என்பது பொய்; அமைச்சர் பேட்டி
1 min read
It is a lie that 43 doctors in Tamil Nadu died for corona; Interview with the Minister
9-8-2020
தமிழ்நாட்டில் 43 டாக்டர்கள் கொரோனாவுக்கு இறந்தார்கள் என்பது பொய் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
மத்திய மந்திரியுடன் ஆலோசனை
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷண்ன் ஆகியோர் மத்திய சுகாதாரத்துறை மந்திரியுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினர்.
அதன்பின்னர் அவர்கள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். . அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் கூறியதவாது:-
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. நமது மாநிலத்தில்தான் அதிகமான கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இந்த பரிசோதனை எண்ணிக்கை இன்னும் அதிகபடுத்தப்படும்.
கொரோனா விசயத்தில் தமிழக அரசு வெளிப்படத்தன்மையாக இருக்கிறது.
43 டாக்டர்களுக்கு கொரோனாவா?
தமிழகத்தில் 43 டாக்டர்கள் கொரோனாவுக்கு இறந்ததாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. ஐ.எம்.ஏ.-வின் மாநிலத் தலைவரே இதை மறுத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆதாரம் இல்லாமல் எந்த செய்தியையும் பரப்ப வேண்டாம்.
இதுபோல செய்திகள் டாக்டர்களின் மன உறுதியை குறைக்கும். ஐ.எம்.ஏ. தெரிவிக்கும் தகவல்கள் பரிசீலிக்கப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.