நேபாளத்திற்கு ரூ. 2.8 கோடி வென்டிலேட்டர்கள்; இந்தியா வழங்கியது
1 min read
Rs. 2.8 crore ventilators; Provided by India
9-8-2020
கொரோனா நோயாளியை குணப்படுத்த பயன்படும் வென்டிலேட்டர்களை நேபாளத்திற்கு இந்தியா வழங்கியது. மொத்தம் ரூ.2.8 கோடி மதிப்பிலான வென்டிலேட்டர்களை வழங்கி உள்ளது.
வென்டிலேட்டர்கள்
இந்தியாவுக்கு நட்பு நாடாக இருந்து நேபாளம் சமீப காலமாக இந்தியாவுக்கு எதிரான போக்கை கையாண்டு வருகிறது. ஆனாலும் இந்தியா அந்த நாட்டுக்கு உதவி செய்து வருகிறது.
தற்போது கொரோனா நோயாளிகளுக்கு உயிர்காக்கும் கருவியான வென்டிலேட்டர்களை இந்தியா, நேபாளத்திற்கு வழங்கியது.
நேபாள தலைநகர் காத்மாண்டில் உள்ள ராணுவ தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில், நேபாளத்திற்கான இந்திய தூதர் வினய் மோகன் குவாத்ரா வென்டிலேட்டர்களை வழங்க, நேபாள ராணுவ தலைமை அதிகாரி பூர்ண சந்திர தபா பெற்றுக் கொண்டார். மொத்தம் 10 வென்டிலேட்டர்கள் இந்தியா சார்பில் வழங்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2 கோடியே 80 லட்சம் ஆகும்.
இரு நாடுகளுக்கு இடையேயான நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் வென்டிலேட்டர்கள் வழங்கப்பட்டதாக இந்திய தூதரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.