June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

உத்தரபிரதேசத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 700 பிராமணர்கள் கொல்லப்பட்டனர்; காங். குற்றச்சாட்டு

1 min read
700 Brahmins have been killed in Uttar Pradesh in the last 3 years; Cong. Accusation

11-8-2020

உத்திரப் பிரதேசத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் 3 ஆண்டு ஆட்சி காலத்தில் சுமார் 700 பிராமணர்கள் கொல்லப்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

உத்தரபிரசேதம்

உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்தின் தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. இவர் சாமியார் ஆனாலும் பிராமணர் சமூகத்தைச் சேர்ந்தவர் அல்ல என்றாலும் பிராமணர்ககள் பாரதீய ஜனதாவை ஆதரிப்பதால் இவர் ஆட்சிக்கு வந்ததாக கூறப்படுகிறது.

உத்தரபிரதேசத்தில் பிராமண சமூக வாக்குகள் 12 சதவிகிதம் உள்ளன. பல ஆண்டுகளாக இவர்களின் வாக்கு காங்கிரசிடம் இருந்தது. ஆனால் ராமர் கோவிலை கண்டிப்பாக கட்டிவிடுவோம் என்று பாரதீய ஜனதா வாக்குறுதி அளித்ததால் அவர்கள் வாக்குகள் எல்லாம் பாரதீய ஜனதா பக்கம் சாய்ந்ததாக கூறப்படுகிறது.

உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பிராமணர் அல்ல என்றாலும் அவர் பிராமணர்களுக்கு ஆதராக செயல்படுவார் என்று கூறப்படுகிறது.

700 பிராமணர்கள் கொலை?

இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் அதாவது கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 700 பிராமணர்கள் கொல்லப்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அன்ஷு அவஸ்தி கூறும்போது, “உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆட்சியில் கடந்த 3 வருடங்களில் சுமார் 700 பிராமணர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அரசு ஆதரவில்லாமல் இது சாத்தியமா? பிராமணக் குடும்பங்கள் உயிருடன் எரிக்கப்பட்டபோது சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சிகளும் எங்கிருந்தன?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

பரசுராமர் பிரச்சினை

உத்தரபிரதேசத்தில் பிராமணர்களின் ஆதரவை இழுக்க காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி கடுமையாக முயற்சி மேற்கொண்டுள்ளன. இதற்கு பரசுராமரையும் கையில் எடுத்துள்ளன.
ராமரைப்போல் பரசுராமரும் மகாவிஷ்ணுவின் அவதாரதம்தான்.
2007-ம் ஆண்டு அந்த மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடந்தது. அப்போது பரசுராமர் ஜெயந்திக்காக அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதை பாரதீய ஜனதா ஆட்சிக்கும் வந்ததும் ரத்து செய்தது. இப்போது பரசுராம் ஜெயந்தி அன்று மீண்டும் அரசு விடுமுறை விட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இந்த கோலிக்கைக்காக, காங்கிரஸ் கட்சியின் புதிய அமைப்பான ‘பிராமின் சேத்னா சமிதி’ தலைவர் ஜிதின் பிரசாத், முதல்-மந்திரி யோகிஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பிராமண சமூக வாக்குகளைப் பெற, ராமருக்கு ஈடாக பரசுராமரை எதிர்கட்சிகள் தூக்கிப் பிடிக்கத் தொடங்கியுள்ளன அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.