June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,871 பேருக்கு கொரோனா ; 5,633 பேர் டிஸ்சார்ஜ்

1 min read

5,871 person affected by corona and discharch 5.633 in Tamilnadu today

12-8-2020

தமிழகத்தில் இன்று ) ஒரே நாளில் 5.871 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இன்று மட்டும் 5,633 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

5,971 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் கொரோனா நிலவரம் பற்றி தினமும் மாலையில் தமிழக அரசின் சுகாதாரத்துறை தகவலை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று (புதன்கிழமை) வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று(புதன்கிழமை) மட்டும் 5,871 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களில் 5,844 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 27 பேர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,14,520 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில் 3,521 பேர் ஆண்கள், 2,350 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,89,677 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,24,814 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29 ஆகவும் உள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 5,633 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட்வர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 56 ஆயிரத்து 313 ஆக உயர்ந்துள்ளது.

119 பேர் சாவு

கொரோனாவுக்கு இன்று மட்டும் 119 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 78 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 41 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளியிலும் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவர். இவர்களையும் சேர்த்து , தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 5,278 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 133 ஆய்வகங்களில் இன்று மட்டும் 69,697 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவைகளுடன் சேர்த்து, இதுவரை 34 லட்சத்து 32 ஆயிரத்து 025 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

தற்போது 52,929 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 15 ஆயிரத்து 378 பேர். 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 2 லட்சத்து 59 ஆயிரத்து 609 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 39 ஆயிரத்து 533 பேர்.

மேற்கண்ட தகவலை சுகாதாரத் துறை வெளியிட்டு உள்ளது.

கடந்த சில நாட்களாக கொரோனா கண்டறியப்பட்டவர்களைவிட டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இன்று கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை டிஸ்சார்ஜ் ஆனவர்களை விட சற்று கூடி இருக்கிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.