இந்தியாவில் ஒரே நாளில் 60,963 பேருக்கு கொரோனா
1 min read
60,963 person affected for corona one day in India
12-8-2020
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 60,963 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா
இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க எத்தனையோ நடவடிக்கை மேற்கொண்டாலும் அது கட்டுப்படுத்தப்படவில்லை. கொரோனா பரவல் பற்றிய விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் தினமும் காலையில் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று காலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இந்தியாவல் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று (செவ்வாய்க்கிழமை )ஒரேநாளில் புதிதாக 60,963 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 22,68,675-ல் இருந்து 23,29,638 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் நேற்று மட்டும் 56,110 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை 16,39,599 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். இது 70.38 சதவீதமாகும்.
834 பேர் சாவு
இந்தியாவில் கொரோனாவுக்கு நேற்று மட்டும் 834 பேர் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 46,091 ஆக உயர்ந்துள்ளது. இது 1.98 சதவீதமாகும்.
தற்போது 6,43,948 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது 27.64 சதவீதமாகும்.
நேற்று மட்டும் பல்வேறு ஆய்வகங்களில் 7,33,449 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை மொத்தம் 2,60,15,297 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன .