அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை குறைக்க வேண்டும்; பஞ்சாப் அரசுக்கு நிபுணர்குழு பரிந்துரை
1 min read
Recommendation to PunjabTo reduce the salaries of government employees
14-8-2020
அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று பஞ்சாப் அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
கொரோனா ஊரடங்கு
இந்தியா முழுவதும் கொரோனா வைரசை கட்டுப்படத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் மாநிலங்கள் அளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதை சரிக்கட்ட என்ன செய்யலாம் என்று ஒவ்வொரு மாநிலமும் தீவிரமாக யோசித்து வருகின்றன.
பஞ்சாப் மாநில அரசு நிதி நிலைமை குறித்து ஆராய மான்டேக் சிங் அலுவாலியா தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. இந்த குழு அளித்த பரிந்துரையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சம்பளம் குறைப்பு
மாநில அரசின் நிதி நிலைமையை சமாளிக்க, மற்ற மாநில அரசுகளை போல், அனைத்து துறை ஊழியர்களின் சம்பளத்திலும், குறிப்பிட்ட சதவீத தொகையை குறைக்க வேண்டும். மாநில அரசு ஊழியர்களுக்கு டி.ஏ., வழங்குவதை மாநில அரசு தாமதபடுத்தியுள்ளது. தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு டிஏ , சம்பள உயர்வுக்கு பின் அரியர் தொகையை வழங்குவது அவசியமில்லை.
பஞ்சாப் மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பள படிகள், மத்திய அரசை காட்டிலும் அதிகம் உள்ளது. அதனை குறைக்க தேவையில்லை. இருப்பினும், மத்திய அரசின் சம்பள படிகள், அதற்கு சமமாகும் வரை, மாநில அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக எந்த சலுகையும் வழங்க வேண்டாம்.
தற்போது மாநில அரசு ஊழியர்களுக்கு தொழில் வரி ரூ.2,500ல் ஆக உள்ளது. அதை 20 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும். அடுத்த சில ஆண்டுகளுக்கு அரசு பணியிடங்களுக்கு புதிய நியமனங்கள் கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.