தமிழ்நாட்டில் ஒரே நாளில் 5,860 பேருக்கு கொரோனா
1 min read
In Tamil Nadu 5.860 people affected for corona today
15-8-2020
தமிழகத்தில் ஒரே நாளில் 5,860 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
5,860 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா பரவல் பற்றிய விவரங்களை தமிழக சுகாதாரத்துறை தினமும் மாலையில் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று( சனிக்கிழமை) வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று 5,860 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களில் 5,830 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 30 பேர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். இவர்களையும் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,32,105 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 135 ஆய்வகங்களில் இன்று மட்டும் 71,343 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து இதுவரை 36 லட்சத்து 40 ஆயிரத்து 796 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
டிஸ்சார்ஜ்
இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,509 பேர் ஆண்கள், 2,351 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 2,00,253 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,31,823 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29 ஆகவும் உள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 5,236 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் ஆனார்கள். இதனால், டிஸ்சார்ஜ் ஆனவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 72 ஆயிரத்து 251 ஆக உள்ளது.
127 பேர் சாவு
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 127 பேர் இறந்தனர். இவர்களில் 83 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும் 44 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டவர்கள். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,641 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 54,213 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 16 ஆயிரத்து 115 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 2 லட்சத்து 74 ஆயிரத்து 039 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 41 ஆயிரத்து 951 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில்…
இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் சென்னையில் மட்டும் 1,179 பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 1,15,444 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையை தவிர இன்று, திருவள்ளூரில் 422 பேருக்கும், செங்கல்பட்டில் 376 பேருக்கும், கடலூரில் 340 பேருக்கும், கோவையில் 290 பேருக்கும், ராணிப்பேட்டையில் 260 பேருக்கும், தேனியில் 213 பேருக்கும், சேலத்தில் 200 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 184 பேருக்கும், கன்னியாகுமரியில் 182 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் 87 பேருக்கும், திருநெல்வேலியில் 169 பேருக்கும், தூத்துக்குடியில் 77 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.
கொரோனாவுக்கு இன்று இறந்தவர்களில் சென்னையில் 26 பேரும், புதுக்கோட்டை, தஞ்சாவூரில் தலா 7 பேரும், கோவை, மதுரை, விருதுநகரில் தலா 6 பேரும், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருநெல்வேலி, திருச்சியில் தலா 5 பேரும், திண்டுக்கல், காஞ்சிபுரம், திருவண்ணாமலையில் 4 பேரும், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, நாமக்கல், சிவகங்கை, தேனி, திருவள்ளூர், திருப்பூர், வேலூரில் தலா 3 பேரும், ஈரோடு, தென்காசி, தூத்துக்குடியில் தலா 2 பேரும், அரியலூர், கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், சேலம், திருவாரூரில் தலா ஒருவரும் அடங்குவர்.
இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,046 பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள். இதன் மூலம் சென்னையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,01,689 ஆக உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று செங்கல்பட்டில் 447 பேரும், திருவள்ளூரில் 427 பேரும், தேனியில் 357 பேரும், வேலூரில் 346 பேரும், கடலூரில் 314 பேரும், திருவண்ணாமலையில் 201 பேரும், விருதுநகரில் 192 பேரும், தூத்துக்குடியில் 184 பேரும், கோவையில் 175 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
===