கொரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்கும்- உலக சுகாதார அமைப்பு ஆராய்ச்சியாளர் தகவல்
1 min read
The corona vaccine is available for free- World Health Organization researcher toled
15-8-2020
“விரைவில் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு இலவசமாக கிடைக்கும்,” என, உலக சுகாதார அமைப்பின் ஆராய்ச்சியாளர் டாக்டர் சவுமியா சாமிநாதன் கூறினார்.
டாக்டர் சவுமியா சாமிநாதன்
நாட்டின் 74வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சென்னையில் முதல்-அமைச்சர் விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில் உலக சுகாதார அமைப்பின் ஆராய்ச்சியாளர் டாக்டர் சவுமியா சாமிநாதனுக்கு முதல்-அமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது. கோவிட்-19 ஒழிப்புப் பணிக்காக முதல்-அமைச்சரின் இந்த சிறப்பு விருதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.விருதைப்பெற்ற பின், டாக்டர் சவுமியா சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இலவச தடுப்பூசி
உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படும் முதல் 3 நாடுகளில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துக்கான ஆராய்ச்சி நடந்து வருகிறது. உலக அளவில் 200 தடுப்பூசிகளுக்கு மேல் ஆராய்ச்சியில் உள்ளன. நமது நாட்டில், 8 நிறுவனங்கள் அதற்கான முயற்சி எடுத்து வருகின்றன. அதற்கு அரசும் உதவி வருகிறது. பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். விரைவில் இலவசமாக தடுப்பூசி கிடைக்கும். அதற்கான நிதி திரட்டலில் அனைவரும் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு டாக்டர் சவுமியா சாமிநாதன் கூறினார்.