July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

சென்னையில் 5 ரூபாய் டாக்டர் மரணம்

1 min read


5 rupees doctor dies in Chennai

16-8-2020

சென்னையில் 5 ரூபாய்க்கு சிகிச்சை அளித்து வந்த டாக்டர் திருவேங்கடம் மரணம் அடைந்தார்.

5 ரூபாய் டாக்டர்

சென்னை வியாசர்பாடியில் 5 ரூபாய் டாக்டர் என்று சொன்னால் குழந்தைகளுக்குகூட தெரியும். அவர் பெயர் திருவேங்கடம். ஆரம்ப காலத்தில் இவர் 2 ரூபாய்க்கு மட்டுமே மருத்துவம் பார்த்து சேவையாற்றி வந்தார். தற்போது ஒவ்வொரு நோயாளியிடமும் 5 ரூபாய் மட்டும்தான் வாங்குகிறார்.

டாக்டர் திருவேங்கடத்திற்கு 70 வயதான நிலையில் கடந்த 13-ந் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அவர்தெற்கு ரெயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று( சனிக்கிழமை) மாரடைப்பு ஏற்பட்டு, அவர் நள்ளிரவில் காலமானார். அவரது மரணம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டாக்டர் திருவேங்கடத்திற்கு சரஸ்வதி என்ற மனைவியும், பிரீத்தி என்ற மகளும் தீபக் என்ற மகனும் உள்ளனர்.

இரங்கல்

டாக்டர் திருவேங்கடம் மறைவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஐந்து ரூபாய் டாக்டர் என அன்புடன் அழைக்கப்பட்ட திருவேங்கடம் வீரராகவன் மறைந்த செய்தி வேதனை அளிக்கிறது. 40 ஆண்டுகளுக்கு மேலாக ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் சிகிச்சை மருத்துவ சேவை வழங்கியுள்ளார். மருத்துவரை இழந்து வாடும் குடும்பத்தார், வியாசர்பாடி, எருக்கஞ்சேரி மக்களுக்கு இரங்கல்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில், “1973ஆண்டில் 2ரூபாயில் தொடங்கி அண்மையில் 5 ரூபாயில் ஏழை எளியோருக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளித்து வந்த வடசென்னை மருத்துவர் திருவேங்கடம் அவர்கள் காலமான செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. இம்மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனங்களில் என்றும் வாழும் மருத்துவருக்கு எனது இதய அஞ்சலி!” கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், வடசென்னையில் வெறும் 2 ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கத் தொடங்கி தன் வாழ்நாளில் அதிகபட்சமாக ரூ.5 மட்டுமே சிகிச்சை கட்டணமாகப் பெற்றவர் ‘மக்கள் டாக்டர்’ திருவேங்கடம்! எளிய மக்களின் உயிர் காக்கும் அன்புக்குரிய மருத்துவராக விளங்கிய திருவேங்கடத்தின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்” என பதிவிட்டுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், வடசென்னையில் வெறும் 2 ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கத் தொடங்கி தன் வாழ்நாளில் அதிகபட்சமாக ரூ.5 மட்டுமே சிகிச்சை கட்டணமாகப் பெற்றவர் ‘மக்கள் டாக்டர்’ திருவேங்கடம்! எளிய மக்களின் உயிர் காக்கும் அன்புக்குரிய மருத்துவராக விளங்கிய திருவேங்கடத்தின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்” என பதிவிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.