ஆன்லைனில் எடுக்கும் பாடம் புரியாததால் மாணவன் தற்கொலை
1 min read
19.8.2020
Student commits suicide because he did not understand the lesson taken onlineதேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதியை அடுத்த நேதாஜி நகரை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் ஆன்லைன் வழியாக பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இணைய வழியாக நடத்தப்படும் பாடங்கள் தனக்கு புரியாமல் இருந்ததால் அந்த சிறுவன் அதிகம் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இதன் காரணமாக, அந்த சிறுவன் விஷ மாத்திரைகளை உண்டு வீட்டிலேயே மயங்கிக் கிடந்துள்ளார். ஆபத்தான நிலையில், அவரை தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக, தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள செல்போன் இல்லாத நிலையிலும், வேறு சில காரணங்களுக்காகவும் பல மாணவர்கள் இது போன்ற தவறான முடிவுகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்பதை அனைவரும் புரிந்து உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதே நமது விருப்பம்.