June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

காஷ்மீரில் கடந்த 4 நாட்களில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

1 min read


6 terrorists shot dead in Kashmir in last 4 days

20-8-2020
காஷ்மீரில் கடந்த 4 நாட்களில் 6 பயங்கரவாதிகள் என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

காஷ்மீரில் தேடுதல் வேட்டை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குகள் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. ஆனாலும் அந்த மாநிலத்தில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் பயங்கரவாதிகள் தாக்கியதில் சில பாதுகாப்பு படையினர் வீர மரணம் அடைந்துள்ளனர்.

காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பாதுகாப்பு படையினர் அதிரடி என்கவுண்ட்டர்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக காஷ்மீரின் வடக்கு மாவட்டங்களான பாரமுல்லா, புல்வாமா, சோபியான் உள்ளிட்ட பகுதிகளில் என்கவுண்ட்டர்கள் நடைபெற்று வந்தது.

பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அப்பகுதிக்கு விரைந்து சென்ற படையினர் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

சுட்டுக்கொலை

அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து திடீர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். உடனடியாக சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர்.

பாதுகாப்பு படையினரின் பதிலடி தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவன் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத குழுவில் உள்ள மிகப்பெரிய கமாண்டர் சஜத் ஹைதர் என்பது தெரியவந்தது. மேலும் 2 பேரில் ஒருவன் உள்ளூரை சேர்ந்தவன் என்பது எஞ்சிய ஒருவன் பாகிஸ்தானை சேர்ந்தவன் என்பது தெரியவந்துள்ளது. இந்த தகவலை காஷ்மீர் டிஜிபி தில்பக் சிங் தெரிவித்துள்ளார்.

6 பேர் சாவு

மேலும், இந்த என்கவுண்டர்கள் தொடர்பாக டி.ஜி.பி. தில்பக் சிங் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 4 நாட்களில் 3 என்கவுண்டர்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த என்கவுண்டர்களில் மொத்தம் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் காஷ்மீரின் டாப் 10 பயங்கரவாதிகள் பட்டியலில் உள்ளவர்கள்.

இந்த என்கவுண்டர் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை. இளைஞர்களை பயங்கரவாத வழிக்கு கொண்டு செல்லும் பயங்கரவாதி சஜத் ஹைதர் சுட்டுக்கொல்லப்பட்டது மக்களுக்கு நிம்மதியை தரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.