June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

பள்ளிக்கூடங்கள் திறக்கும் வரை மாணவர்களுக்கு உலர் உணவுகள் வழங்க உத்தரவு

1 min read


Instructed to provide dry meals to students until schools reopen

20-8-2020

பள்ளிக்கூடங்கள் திறக்கும் வரை சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவுகள் வழங்க அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

கொரோனா ஊரடங்கு

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கடந்த மார்ச் மாதம் 6-ந் தேதி முதல்பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
கொரோனா கட்டுப்படுத்த படாததால் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளிகள் திறப்பு தள்ளி போய் கொண்டே உள்ளது.

உலர் உணவுகள்

இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு உலர் உணவு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பும் வரை உலர் உணவுத்திட்டத்தை தொடர ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படும் வரை மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவுகளை தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும் அரசு குறிப்பிட்டுள்ளது.

மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதை தவிர்க்க மதிய உணவுக்கு பதிலாக உலர் உணவுப்பொருட்கள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.