சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கர் சுட்டுக்கொலை
1 min read
Rowdy Shankar shot dead by police in Ayanavaram, Chennai
21-8-2020
சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கர் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்
ரவுடி சங்கர்
சென்னையில் பிரபல ரவுடியாக விளங்கியவர் சங்கர். பல்வேறு குற்ற இவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் ரவுடி சங்கர், அயனாவரத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் அயனாவரத்தில் நியூ ஆவடி சாலையில் பதுங்கி இருந்த சங்கரை பிடிக்க முயன்றனர்.
அப்போது ரவுடி சங்கர் அரிவாளால் போலீசாரை வெட்டினார். இதில் முபாரக் என்ற போலீஸ்காரருக்கு வெட்டுக் காயம் ஏற்பட்டது.
இதனால் வேறு வழியின்றி போலீசார் தற்காப்புக்காக ரவடி சங்கர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் சங்கர் குண்டு பாய்ந்து இறந்தார்.
சங்கரின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சுட்டுக்கொல்லப்பட்ட ரவடி சங்கர் மீது, 4 கொலை வழக்குகள், 4 கொலை முயற்சி வழக்குகள், 29 அடிதடி மற்றும் ஆள்கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சங்கரால் அரிவாளால் வெட்டப்பட்ட போலீஸ்காரர் முபாரக் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.