தமிழகத்தில் ஒரே நாளில் 5,995 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 5,995 people in a single day in Tamil Nadu
21-8-2020
தமிழகத்தில் ஒரே நாளில் 5,995 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
5,995 பேருக்குகொரோனா
தமிழகத்தில் கொரோனா பரவல் பற்றிய விவரங்களை தமிழக சுகாதாரத்துறை தினமும் மாலையில் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று ( வெள்ளிக்கிழமை) வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை)மட்டும் ஒரே நாளில் 5,995 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில், 5,963 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 32 பேர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்.
இவர்களையும் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,67,430 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 139 ஆய்வகங்கள் மூலம் இன்று மட்டும் 74,344 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 40 லட்சத்து 62 ஆயிரத்து 943 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
டிஸ்சார்ஜ்
இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,630 பேர் ஆண்கள், 2,365 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 2,21,753 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,45,648 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29 ஆகவும் உள்ளது.
தமிழகத்தில் இன்று( வெள்ளிக்கிழமை) மட்டும் 5,764 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் வீடு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 7 ஆயிரத்து 677 ஆக உள்ளது.
101 பேர் சாவு
தமிழகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) மட்டும் கொரோனா பாதித்த 101 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 65 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 36 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்வர்கள். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 6,340 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 53,413 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 17 ஆயிரத்து 484 பேர். 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 3 லட்சத்து 3 ஆயிரத்து 51 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 46 ஆயிரத்து 895 பேர்.
சென்னையில்….
சென்னையில் இன்று மட்டும் 1,282 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 1,22,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர இன்று செங்கல்பட்டில் 430 பேருக்கும், கோவையில் 395 பேருக்கும், திருவள்ளூரில் 369 பேருக்கும், சேலத்தில் 269 பேருக்கும், கடலூரில் 242 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 220 பேருக்கும், வேலூரில் 200 பேருக்கும் கொரோனா கண்டறிப்பட்டு உள்ளது.
தென்காசி
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று 163 பேருக்கும் , தென்காசியில் 112 பேருக்கும், தூத்துக்குடியில் 127 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.
சென்னையில் மட்டும் 23 பேரும், சேலத்தில் 6 பேரும், கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூரில் தலா 4 பேரும், செங்கல்பட்டு, கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், நாமக்கல், ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, திருவண்ணாமலை, திருநெல்வேலியில் தலா 3 பேரும், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், திருச்சி, விழுப்புரம், விருதுநகரில் தலா 2 பேரும், ஈரோடு, கள்ளக்குறிச்சி, மதுரை, நீலகிரி, திருப்பத்தூர், தூத்துக்குடி, திருப்பூரில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 866 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன் மூலம் சென்னையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,07,492 ஆக உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று கடலூரில் 511 பேரும், செங்கல்பட்டில் 448 பேரும், தேனியில் 381 பேரும், விருதுநகரில் 351 பேரும், திருவள்ளூரில் 348 பேரும், காஞ்சிபுரத்தில் 339 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.