திருநங்கைகள் உட்பட 3 பேர் கொலை; பிணங்களை வாங்க மறுத்து திருநங்கைகள் சாலைமறியல்
1 min read
3 killed, including transgender people; Transgender roadblocks refusing to buy corpses
23-8-2020
திருநங்கைகள் உட்பட 3 பேர் கொலை வழக்கில் கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் 3 திருநங்கைகளை கைது செய்யக் கோரி 50 க்கும் மேற்பட்ட திருநங்கைகள் உடலை வாங்க மறுத்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநங்கைகள் கொலை
நெல்லை பேட்டை அருகே உள்ள நரசிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த திருநங்கைகள் பவாணி, அனுஷ்கா மற்றும் காரியாண்டி பகுதியைச் சேர்ந்த முருகன் ஆகியோர் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் குழந்தை ஒன்றை தத்தெடுக்க முடிவு செய்து சேலத்தை சேர்ந்த ரிஷிகேஷ் என்பவர் மூலம் முயற்சி மேற்கொண்டனர்.
அவர்கள் குழந்தைக்காக ரூ.3 லட்சம் பணமும் கொடுத்துள்ளனர். ஆனால் ரிஷிகேஷ் பணத்தை வாங்கிக் கொண்டு குழந்தையை தத்தெடுத்துக் கொடுக்காமல் காலம்தாழ்த்தி வந்துள்ளார்.
குழந்தையை வாங்கித் தரவேண்டும் அல்லது கொடுத்த தரவேண்டும் என்றுகேட்டனர்.. இந்த நிலையில் அவர்கள் குழந்தையை கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்ததால் பாவாணி, அனுஷ்கா மற்றும் முருகன் ஆகியோரை ரிஷிகேஷ் தனது நண்பர்களுடன் கொலை செய்து உடல்களை கிணற்றில் வீசிவிட்டனர் .
3 பேர் கைது
இதுகுறித்து மற்ற திருநங்கைகள் அளித்த புகாரின் அடைப்படையில் மாநகர போலீசார் விசாணை நடத்தி ரிஷிகேஷ், அவரது நண்பர்கள் ஸ்னோவின், மற்றும் செல்லத்துரை ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ரிஷிகேஷ் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-
நான் சேலத்தில் கேஸ் ஏஜென்சி நடத்தி வருகிறேன். எனது மனைவி விவகாரத்து பெற்று சென்றுவிட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிக்-டாக் மூலம் நெல்லை நரசிங்கநல்லூரைச் சேர்ந்த திருநங்கை ரேணுகா என் பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு நான் ஊரில் இருந்து புறப்பட்டு நரசிங்க நல்லூர் வந்து ரேணுகாவுடன் குடும்பம் நடத்தினேன்.
பின்னர் பாளையங்கோட்டை மகாராஜநகரில் ரூ.12 ஆயிரத்திற்கு வாடகைக்கு வீடு எடுத்து கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்தோம். அப்போது முருகன், பவானியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க விரும்புவதாக தெரிவித்தனர்.
கொன்றோம்
அதற்கு நான், குழந்தையை தத்தெடுத்து தருவதாக கூறி அவர்களிடமிருந்து ரூ.3 லட்சம் வாங்கினேன். அப்போது அனுஷ்காவும் தனக்கு ஒரு குழந்தையை தத்தெடுத்து தர வேண்டும் என்று கூறினார். அதற்கும் நான் ஒப்புக் கொண்டேன். இதற்கி டையில் குழந்தையை தத்து எடுத்து கொடுக்காததால் பணத்தை கேட்டு முருகன், பவானி ஆகியோர் தொந்தரவு செய்தனர். இதுகுறித்து எனது நண்பர் சுனோவினிடம் கூறினேன். அதன்பிறகு அவர்களை தீர்த்துக்கட்ட திட்டமிட்டேன். அதன்படி கடந்த 19-ந் தேதி சேலத்திற்கு சென்று குழந்தையை தத்தெடுத்து வரலாம் என்று கூறி மகாராஜநகரில் உள்ள வீட்டிற்குவரவழைத்தேன். அங்கு வைத்து 3 பேரும் என்னிடம் தகராறு செய்தனர்.
ஆத்திரமடைந்த நான், நண்பர் சுனோவின், செல்லத்துரை ஆகியோர் அனுஷ்காவை கட்டையால் அடித்து கழுத்தை நெரித்துக் கொன்றோம். அப்போது அங்கிருந்த முருகன், எங்களை போலீசில் காட்டிக் கொடுத்து விடுவதாக கூறினார். இதனால் அவரையும், பவானியையும் கழுத்தை நெரித்துக் கொன்றோம்.
பின்னர் 3 பேரின் உடல்களையும் தனித்தனி சாக்கு மூட்டைகளில் கட்டி கேடிசி நகர் கக்கன் நகர் நான்கு வழிச்சாலையோரம் உள்ள பாழடைந்த கிணறுகளில் வீசி விட்டோம்.
இவ்வாறு ரிஷிகேஷ் வாக்குமூலம் அளித்தார்.
இதற்கிடையில் கைது செய்யப்பட்ட 3 பேரும் மருத்துவ பரிசோதனைக்கு பின் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மறியல்
இந்த நிலையில் திருநங்கைகள் பவாணி அனுஷ்கா மற்றும் முருகன் ஆகியோர் உடல்கள் உடற்கூறு ஆய்வு முடிக்கப்பட்ட நிலையில் உடலை வாங்க மறுத்து திருநங்கைகள் 50 க்கும் மேற்பட்டவர்கள் மறியலில் இடுபட்படனர். அவர்கள் இந்த வழக்கில் தொடர்புடை திருநங்கைகள் ஹரீனா, ரேணுகா மற்றும் தாரணியை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு திடிரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மேற்கூறிய 3 பேரும் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்தைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு மூன்று பேரின் உடல்களையும் பெற்றுக்கொண்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது
இந்த முறை ஊரடங்கு குறித்த செய்திகளை வெளியிடும் போது இ பாஸ் ரத்தாகிறது என அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.