கோமா நிலையில் பிரணாப் முகர்ஜி
1 min read
Pranab Mukherjee in a coma
23-8-2020
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கோமா நிலைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
பிரணாப் முகர்ஜி
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த, 10-ந் தேதி டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தலையில் ரத்தக்கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது, பரிசோதனையில் தெரிந்தது.
அந்த ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை மூலம், அவரது மூளையில்இருந்த ரத்த கட்டு அகற்றப்பட்டது.
ஆனாலும் அவரது நிலை கவலைக்கிடமாக மாறியது.
கோமா
இந்த நிலையில் பிரணாப்முகர்ஜி கோமா நிலைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. ராணுவ மருத்துவமனை நேற்று (சனிக்கிழமை ) வெளியிட்ட அறிக்கையில், “பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில், எந்த மாற்றமும் இல்லை. அவருக்கு தொடர்ந்து, செயற்கை சுவாசம் வழங்கப்படுகிறது. அவரது ரத்த ஓட்டம், இதயத் துடிப்பு உள்ளிட்டவை சீராக உள்ளன. அவரை, டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்’ என, கூறப்பட்டுள்ளது.
மருத்துவமனை இன்று(ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் ,
“பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. அவர் ஆழ்ந்த கோமாவில் உள்ளார். அவரது உடல் உறுப்புகள் சீராக இயங்கும் நிலையில், வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.” என்று கூறியுள்ளார்.