கைலாசா நாட்டில் ஓட்டல் நடத்த அனுமதி கோரிய மதுரை பிரமுகர்
1 min read
Madurai perdon seeks permission to run hotel in Kailasha
24-8-2020
கைலாசா நாட்டில் ஒட்டல் நடத்த அனுமதி வழங்க கோரிய மதுரை ஓட்டல் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் மற்றும் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கைலாசா நாடு
பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தற்போது தலைமறைவாக இருக்கு நித்யானந்தா கைலாச நாடு ஒன்றை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவர் அந்த நாட்டுக்கான பணத்தையும் வெளியிட்டு உள்ளார்.
கைலாசா நாட்டில் ஓட்டல் நடத்த அனுமதி கோரி மதுரை டெம்பிள் சிட்டி ஓட்டல் அதிபர் குமார் என்பவர் நித்தியானந்தாவுக்கு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. அவர் எழுதிய கடிதத்திற்கு இணையம் வாயிலாக பதில் அளித்த நித்தியானந்தா விரைவில் ஓட்டல் அமைக்க அங்கீகாரம் வழங்கப்படும் என தெரிவித்தார்.
புகார்
இந்த நிலையில் டெம்பிள் சிட்டி ஓட்டல் அதிபர் குமார் இந்திய அரசுக்கு எதிராக செயல்படுவது மட்டுமில்லாமல், அரசால் தேடப்பட்டு வரும் குற்றவாளி நித்தியானந்தாவுக்கு ஆதரவாக செயல்படுவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த வக்கீல் முத்துக்குமார் என்பவர் மதுரை மாவட்ட கலெக்டர் மற்றும் மநகராட்சி போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
ஓட்டல் அதிபர் விளக்கம்
கைலாசாவில் ஓட்டல் வைக்க அனுமதி கோரிய குமார் என்பவர் கூறும்போது தான் காமெடிக்காக நித்தியானந்தாவிற்கு கடிதம் எழுதியதாக கூறுகிறார். கைலாசாவில் ஓட்டல் நடத்தும் எண்ணம் எதுவும் தனக்கு இல்லை என்றும் தன்னுடைய கடிதத்திற்கு நித்தியானந்தாவிடம் பதில் வரும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் குமார் கூறினார். கோடிக்கணக்கான இந்தியர்களின் குழப்பத்திற்கு தீர்வு காணும் முயற்சியில் நான் அவ்வாறு கடிதம் எழுதியதாகவும் அவர் கூறியுள்ளார்.