June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

திருவனந்தபுரம் விமான நிலைய பிரச்சினை- கேரள சட்டசபையில் தீர்மானம்

1 min read

Thiruvananthapuram Airport Issue – Resolution in the Kerala Legislative Assembly

24-8-2020

திருவனந்தபுரம் விமானநிலையத்தை பரமாரிக்கும் பொறுப்பை 50 ஆண்டுகளுக்கு அதானி குழுமத்திற்கு குத்தகைக்கு விட மத்திய அரசு எடுத்துள்ள முடவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விமான நிலையம்

இந்திய விமான நிலைய ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஜெய்ப்பூர், குவகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய 3 விமான நிலையங்களை பொதுத்துறை, தனியார் கூட்டு முயற்சியில் 50 ஆண்டுகளுக்கு அதானி குழுமத்திடம் குத்தகைக்கு விட மத்திய மந்திரி சபை ஒப்புதல் வழங்கியது.

திருவனந்தபுரம் விமான நிலையத்தின் பராமரிப்பை அதானி குழுமத்திடம் ஒப்படைக்கும் முடிவுக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரவித்தார். இதுபற்றி அவர் பிரதமர் மோடிக்குக் கடிதமும் எழுதி உள்ளார்.
மேலும் மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து, கேரள ஐகோர்ட்டில் கேரள அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது.

தீர்மானம்

இப்போது மத்திய அரசின் முடிவை எதிர்த்து கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

கேரள சட்டப்பேரவைக் கூட்டம் இன்று( திங்கட்கிழமை) ஒருநாள் மட்டும் கூடியது. அப்போது கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், இதற்கான தீர்மானத்தைத் தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
திருவனந்தபுரம் விமான நிலையத்தின் பராமரிப்பை 50 ஆண்டுகள் குத்தகைக்கு அதானி குழுமத்துக்கு மத்திய அரசு ஏலத்தில் வழங்கிய முடிவை மறு ஆய்வு செய்ய வேண்டும். விமான நிலையத்தில் பெரும்பகுதிப் பங்கு மாநில அரசுக்கு இருப்பதால், அதை அதானி குழுமத்துக்கு வழங்கக் கூடாது.
அதானி குழுமம் டெண்டரில் குறிப்பிட்டிருந்த அதே விலையை வழங்க கேரள அரசும் தயாராக இருக்கிறது. ஆனால், திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை நியாயப்படுத்த முடியாது.
இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.

இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா பேசுகையில், ”மாநில அரசு கொண்டுவந்த இந்தத் தீர்மானத்தை மாநிலத்தின் நலனுக்காக நாங்கள் ஆதரிக்கிறோம்,” என்றார். விவாதம் முடிந்த நிலையில் பேரவைத் தலைவர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன், அரசு கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக அறிவித்தார்.

பாரதீய ஜனதா

கேரள சட்டசபையில் பாரதீய ஜனதாவுக்கு ராஜகோபால் என்ற ஒரேஒரு உறுப்பினர்தான் உள்ளார். அவர் சட்டசபையில் தனக்குப் பேச வாய்ப்பு வழங்கவில்லை என்றுகூறி வெளிநடப்புச் செய்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.