தமிழகத்தில் ஒரே நாளில் 5,937 பேருக்கு கொரோனா; 6,998 பேர் டிஸ்சார்ஜ்
1 min read
Corona for 5,937 people in a single day in Tamil Nadu; 6,998 discharged
25-8-2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,937 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இன்று ஒரே நாளில் 6,998 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
5,937 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா பரவல் பற்றிய விவரங்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று( செவ்வாய்க்கிழமை) ஒரே நாளில் 5,951 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதில், 5,937 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 14 பேர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்.
இவர்களையும் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,91,303 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 141 ஆய்வகங்களில் இன்று மட்டும் 70,221 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவைகளுடன் சேர்த்து, இதுவரை 43 லட்சத்து 46 ஆயிரத்து 861 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 3,615 பேர் ஆண்கள். 2,336 பேர் பெண்கள். கொரோனா பாதித்த மொத்த் ஆண்களின் எண்ணிக்கை 2,36,294 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,54,980 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29 ஆகவும் உள்ளது.
6998 பேர் டிஸ்சார்ஜ்
கொரோனாவில் இருந்து இன்று மட்டும் 6,998 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 32 ஆயிரத்து 454 ஆக உள்ளது.
இன்று மட்டும் கொரோனா பாதித்த 107 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 65 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 42 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டவர்கள். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 6,614 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 52,128 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 18 ஆயிரத்து 433 பேர். 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 3 லட்சத்து 22 ஆயிரத்து 686 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 50 ஆயிரத்து 184 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.