இன்று அவதார நாள்; அன்னையைப் போற்றுவோம்
1 min read
Today Annai Teresa brith day
26-8-3030
“ஏழை எளியோர்களுக்கு ஆதரவற்றோர்களுக்கு நீங்கள் செய்த உதவிகள் எனக்கே செய்த உதவிகள். அவர்களுக்கு செய்ததன் மூலம், நீங்கள் எனக்குத்தான் உதவி செய்தீர்கள்.”- இயேசுநாதர்.
அல்போனியா நாட்டில் 1910&ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ம் நாள் பிறந்த அன்னை தெரசா துறவு மேற்கொண்டு 1929-ம் ஆண்டு ஜனவரி 6&ம் நாள் இந்தியா வந்தார். “எல்லோரும் அமர நிலை எய்தும் நன்முரையை இந்தியா உலகிற்கு அளிக்கும். ஆம் இந்தியா உலகிற்கு அளிக்கும்” என்று பாரதி பாடினாரே அந்த இந்தியாவுக்கு வந்தார் அன்னை தெரசா.
இவருடைய இயற்பெயர் ஆக்னஸ் பொன்சா. ஆக்னஸ் என்றால் ரோஜா மலரின் அரும்பு என்று அல்பேனியா மொழி பொருள்கூறும்.
அவரது துறவு வாழ்கையை மேற்கொள்ள கன்னியர் சபையின் பாதுகாவலராக இருந்த பெரோஸா டிவிசுயு பெயரை சுருக்கமாக தெரசா என்று தனக்கு கூட்டிக்கொண்டார்.
1948-ம் ஆண்டில் ஒரு நாள் தெருவின் உயிர் ஊசலாடிய நிலையில் கிடந்த ஒருவரைக் கண்டார். உடனே அவரை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு போனார், தெரசா. அங்கு அந்த மனிதனை அனுமதிக்க ம-றுத்துவிட்டனர், மருத்துவர்கள், “அந்த மனிதன் இறக்கும் நிலையில் இருந்ததால், ஒரு படுக்கையை வீணாக்க விரும்பவில்லை” என்று கூறி, அனுமதி மறுக்கப்பட்டது.
பூமியினும் பொறுமைக்குரிய அன்னை தெரசா- சினம் அறியாத அன்னை அறியாத சினம் கொண்டார். மருத்துவமனை வாயிலில் போராட்டத்தில் குதித்தார். வேறு வழியின்றி அந்த மனிதர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். ஆனால் சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.
“இந்த துயர நிகழ்வுக்கு பிறகே, தனியே ஓரிடத்தை உருவாக்கி ஆதரவற்றோர்களுக்கு அடைக்கலமும், சாவின் பிடியில் இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் கன்னியமான மரணத்தை பெற்றுத் தரவும் முடிவு எடுத்தார்.” என்கிறார், அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதிய இந்திய முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நவீன் டி சாவ்லா.
இதைத் தொடர்ந்து பெரும் புண்ணிய நெஞ்சத்துக்குரிய அன்னை தெரசா கொல்கத்தாவில் ஓர் அறக்கட்டளையை நிறுவி தொழு நோயாளிகளுக்காகவும் சமூகத்தில் ஒதுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த சிறுவர்&சிறுமிகளுக்காகவும், ஆதரவற்ற குடிசைவாசிகளுக்காகவும், தம் வாழ்வை அர்ப்பணித்தார். அவருடைய தொண்டின் பெருமை சொல்லவும் அரிது.
123 நாடுகளில் சமூக சேவை அமைப்பை ஏற்படுத்தி அமைதிக்கான நோபல் பரிசையும், இந்தியாவில் பாரத ரத்னா விருதையும், மெடல் ஆப் கிரீடம் என்னும் விருதை அமெரிக்காவிடமும் பெற்ற அன்னை தெரசா, 1997&ம் ஆண்டு நவம்பர் திங்கள் 5&ம் நாள் மறைந்தார். ஆம் அவர் மண்ணுக்குள் உறங்கச் சென்றுவிட்டார்.
அப்போது இந்திய அரசு தனது மரபுகளைத் தாண்டி கறுப்பு கட்டம் கட்டி அன்னை தெரசாவின் மரணச் செய்தியை அரசு இதழில் வெளியிட்டு, அரசு முழு மரியாதையுடன் நன்னடக்கம் செய்தது.
“ இறக்கத்தான் பிறந்தோம். இருக்கும்வரை இரக்கத்தோடு இருப்போம்”என்று போதித்து வாழ்ந்து காட்டிய அன்னையின் அறநெறியை பின்பற்றுவோம்.
“அன்னைக்கும் அன்னையாவார் அன்னை தெரசா
அன்புக்கும் அன்பானவர் அன்னை தெரசா
கண்ணுக்கும் கண்ணானவர் அன்னை தெரசா
கடவுளுக்கும் கடவுளானவர் அன்னை அதெரசா
‘பண்புடையார் பட்டுண்டு உலகம்’
என்ற பண்புக்கும் பண்பானவர் அன்னை தெரசா
அன்னையைப்போல் எங்களாலே ஆக முடியல
அதனாலே பாவமன்னிப்பு அருள்வாய் அன்னையே”
அவர் பிறப்பால் அல்பேனியர். வாழ்க்கையால் இந்தியர். தமது பரந்த சேவை மூலம் உலகையே தனது வீடாக ஆக்கிக் கொண்டவர்.
இறப்புக்கு பிறகும் கருணை தேவதையான அன்னை தெரசா, அற்புதங்களை நிகழ்த்தி வருகிறார். அதனால் அவர் மறைந்து 19- ஆண்டுகளுக்கு பிறகு 2016&ம் ஆண்டு செப்டம்பர் 4-ம் நாள் “செயின்ட் ஹுட்” என்ற புனிதர் அளிக்கப்பட்டது.
அன்னை தெரசா உயிரோடு இருக்கும்போதே அவரை தமிழகத்திற்கு அழைத்து வந்து அவரது பெயரில் பெண்களுக்கான பல்கலைக்கழகத்தை கொடைக்கானலில் தொடங்கினார், அப்போதைய முதல்&அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர் உயிரோடு இருக்கும்போதே அஞ்சல்தலையில் இடம் பிடித்த முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவர்.
அன்னை தெரசாவின் நூண்றாண்டு விழாவை முன்னிட்டு அவருடைய உருவம் பொறித்த 5 ரூபாய் நாணயத்தை இந்திய அரசாங்கம் வெளியிட்டு சிறப்பித்தது.
“அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றா தடை”
——–கவிஞர் பி.முருகேசன்.
மதுரை