பப்ஜி உள்பட 118 செயலிகளுக்கு இந்தியாவில் தடை
1 min read
18 processors banned in India, including Babji
2-9-2020
இந்தியாவில் பப்ஜி உள்பட 118 செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சீனா
சீனா அடிக்கடி இந்தியாவுடன் மோதல் போக்கை கடை பிடித்து வருகிறது. லடாக் எல்லையில் சீன வீரர்கள் ஊடுருவலை தடுத்தபோது ஏற்பட்ட சண்டையின் 20 இந்திய வீரர்கள் மரணம் அடைந்தனர். சீனா தரப்பிலும் பலர் கொல்லப்பட்டனர்.
இதனை தொடர்ந்து சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது. இந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் இருந்ததால் டிக்டாக் உள்பட 58-க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடைவிதித்தது.
பப்ஜி
இப்படி தடை விதித்தும் சீனா திருந்தவில்லை. எல்லைப் பகுதியில் தொடர்ந்து பதற்ற நிலையை உருவாக்கி வருகிறது.
இதனை அடுத்து பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் பல செயலிகள் தடை விதிக்கப்படும் எனவும், அது குறித்த பரிசீலித்து வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.
அதன்படி பப்ஜி, கட் கட், பைடு, ரைஸ் ஆஃப் கிங்டம் உள்பட 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடைவிதித்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69 ஏ இன் கீழ் இந்த தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பை மின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வரவேற்பு
பப்ஜி தடை செய்யப்பட்டதற்கு பலர் வரவேற்பு செய்துள்ளனர். பல குழந்தைகள், இளைஞர்கள் இதற்கு அடிமையாகி நேரத்தை வீணாக்கியதாக பெற்றோர்கள் கூறினார்கள்.