தமிழகத்தில் 7-ந் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பஸ், ரெயில் போக்குவரத்து தொடக்கம்
1 min read
Bus and rail service between the districts will start on the 7th in Tamil Nadu
2-9-2020
வருகிற 7-ந் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பஸ் மற்றும் ரெயில் போக்குவரத்து தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இது தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
7-ந் தேதி முதல்…
தமிழகத்தில் தற்போது, மாவட்டத்திற்குள் மட்டும் பஸ் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. பொது மக்கள் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு முக்கிய பணி மற்றும் வியாபார நிமித்தமாக சென்று வர அனுமதி கேட்டு பொது மக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன.
மக்களின் நலனை கருத்தில் கொண்டு, நிலையான வழிகாட்டு நடைமுறைகள் பின்பற்றி, வருகிற7 -ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கிடையேயும் அரசு மற்றும் தனியார் பஸ் சேவை போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
மேலும், அனுமதிக்கப்பட்ட தடங்களில் மாநிலங்களுக்கு இடையேயான ரெயில் போக்குவரத்திற்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி தற்போது வருகிற7 -ந் தேதி முதல் மாநிலத்திற்குள் பயணியர் ரெயிலில் போக்குவரத்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.