நீட் தேர்வு 13-ந் தேதி நடைபெறும்- சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
1 min read
NEET Examination to be held on 13th; Supreme Court Permission
4-9-2020
நீட்’ தேர்வை கண்டிப்பாக நடத்த வேண்டும் என பிறப்பித்த உத்தரவை மறு சீராய்வு செய்யக்கோரி 6 மாநிலங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைசுப்ரீம்கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனால் திட்டமிட்டபடி வருகிற 13-ந் தேதி நீட் தேர்வு நடக்கும்.
நீட் தேர்வு
மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வான ‘நீட்’ மற்றும் ஜே.இ.இ. பிரதான நுழைவுத் தேர்வுகளை கொரோனா பரவல் மற்றும் மழை வெள்ள பாதிப்புகளால் ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இந்த தேர்வுகளை ரத்து செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் சுப்ரீம் கோர்ட்டு அந்த மனுவை தள்ளுபடி செய்தது.
மேலும் “போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தேர்வுகளை கண்டிப்பாக நடத்த வேண்டும்” என்றும் உத்தரவிட்டது.
மறுசீராய்வு
இந்த தீர்ப்பை மறுசீராய்வு செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் ஆளும் மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், பஞ்சாப், மராட்டியம், சத்தீஸ்கர் ஆகிய 6 மாநிலங்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் “மாணவர்கள் வாழ்வதற்கான உரிமையை சுப்ரீம்கோர்ட்டு கவனத்தில் கொள்ளவில்லை. அதேபோல் கொரோனா பரவலுக்கு இடையே தேர்வுகளை நடத்துவதில் உள்ள நடைமுறை கஷ்டங்களையும் கவனத்தில் கொள்ளவில்லை. அதனால் தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும்” என கூறப்பட்டு இருந்தது.
இந்த மனவை நீதிபதிகள் அசோக் பூஷன், பி.ஆர்.கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
ஆறு மாநிலகளின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுகள் தள்ளுபடி செய்யப்பட்டதால் வருகிற 13-ந் தேதி நீட் தேர்வு நடப்பது உறுதியாகிவிட்டது.