June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

கேரள பள்ளி ஆசிரியைக்கு எதிராக ஆபாச கருத்து -வக்கீல் மீது மகளிர் ஆணையம் வழக்கு

1 min read

5.9.2020

Women’s Commission case against Kerala school teacher for pornography-lawyer

கேரளா மாநிலம் காேழிக்கோடு மேப்பையூர் பகுதியை சேர்ந்தவர் சாய் சுவேதா. தொடக்கப்பள்ளி ஆசிரியை. தற்போது ெகாரோனா அச்சம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், ஆன்-லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் 1ம் வகுப்புக்கு ஆன்-லைனில் பாடம் எடுத்த சாய் சுவேதா மிகவும் பிரபலமானார். இவர் பாட்டு பாடியும், நடனமாடியும், கதைகள் கூறியும் பாடங்களை சொல்லி கொடுத்தது மாணவர்களை மட்டுமல்லாது பெற்றோரையும் ெவகுவாக கவர்ந்தது.

இதையடுத்து சாய் சுவேதாக்கு ஏராளமான விளம்பர வாய்ப்புகளும் வந்தன. ஆனால் அவற்றை தட்டிக்கழித்த சாய் சுவேதா, ஆசிரியர் ெதாழிலைல மகேசன் பணியாக விரும்பி செய்து வருகிறார்.

இந்த நிலையில் கொச்சியை சேர்ந்த ஜித் என்பவர் போன் செய்து, தனக்கு தெரிந்த ஒருவர் சினிமா எடுப்பதாகவும், அதில் நடிக்க விருப்பமா எனவும் சாய் சுவேதாவிடம் ேகட்டுள்ளார். ஆனால் தனக்கு அதில் விருப்பமில்லை என ஆசிரியை கூறியுள்ளார்.

இந்த நிலையில் பேஸ்-புக், வாட்ஸ் அப் உட்பட சமூக வலைத்தளங்களில் ஆசிரியை சாய் சுவேதா குறித்த ஆபாச கருத்துக்கள் வெளியாயின. இதைப்பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதுகுறித்து விசாரித்தபோது வக்கீல் ஜித்தான் இந்த தகாத செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

சாய் சுவேதா சினிமா வாய்ப்பை மறுத்ததால் ஆத்திரம் அடைந்த ஜித் இவ்வாறு செய்துள்ளார். இதுகுறித்து ஆசிரியை சாய் சுவேதா, முதல்வர் பினராயி விஜயன், டிஜிபி லோக்நாத் பெக்ரா ஆகியோரிடம் புகார் செய்தார். இந்த நிலையில் ஜித்துக்கு எதிராக கேரள மகளிர் ஆணையமும் வழக்குப்பதிவு செய்துள்ளது.

ேமலும் இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கோழிக்கோடு எஸ்பியை மகளிர் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. ஆசிரியை சாய் சுவேதாவை அவமானப்படுத்தும் வகையில் ெசயல்பட்ட வக்கீல் ஜித்தின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என மகளிர் ஆணைய தலைவர் ஜோஸ்பின் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.