இந்தியாவில் ஒரே நாளில் 73,643 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தனர்
1 min read
All over India, 73,643 people recovered from corona in one day
6-9-2020
இந்தியாவில ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 73, 643 பேர் குணம் ஆகி வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா
இந்தியாவில் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. அதேநேரம் கொரோனாவில் இருந்து குணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா பரவில் விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் தினமும் காலைியல் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று ( ஞாயிற்றுக்கிழமை) மத்திய சுகாதார அமைச்சகர் வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் நேற்று (சனிக்கிழமை) ஒரே நாளில் புதிய உச்சமாக 90,633 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 41,13,812 ஆக உள்ளது.
1065 பேர் சாவு
தற்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கொரோனாவுக்கு 8,62,320 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் நேற்று ஒரே நாளில் மட்டும் 1,065 பேர் இறந்துள்ளனர். அவர்களையும் சேர்த்து இதுவரை கொரேனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 70,626 ஆக உள்ளது.
டிஸ்சார்ஜ்
கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று மட்டும் 73,643 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 31,80,866 ஆக உள்ளது.