கோவையில் மழைக்கு வீடு இடிந்து 4 பேர் பலி
1 min read
4 killed in Coimbatore house collapse
7-9-2020
கோவையில் பெய்து வரும் தொடர் மழைக்கு நேற்றிரவு வீடு இடிந்து விழுந்து4 பேர் இறந்தனர்.
வீடு இடிந்தது
தற்போது தென்மேற்கு பருவ மழை காலம். இதனாலும், மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கோவை பகுதியிலும் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது.
தொடர் மழை காரணமாக கோவையில் செட்டி வீதியில் உள்ள கண்ணன் என்பவருக்கு இரண்டு அடுக்கு வீடு இடிந்தது. இந்த வீட்டின் முதல் தளத்தில் கண்ணன், இவரது மனைவி சுவேதா, 6 வயது குழந்தை தன்வீர் மற்றும் அவரது தாய் வனஜா, தங்கை கவிதா ஆகியோர் வசித்து வந்தனர்.
தரை தளத்தில் இன்னொரு குடும்பத்தினர் வசித்து வந்தனர்.
4 பேர் பலி
நேற்று ( ஞாயிற்றுக்கிழமை) இரவு பெய்த கன மழையால் கண்ணனின் வீடு இடிந்து, அருகிலுள்ள ஓட்டு வீட்டின் மீது விழுந்தது. இந்த விபத்தில், சுவேதா மற்றும் கோபால்சாமி ஆகியோர் இறந்தனர்.
இடிபாடுகளில் சிக்கியிருந்த 6 வயது குழந்தை தன்வீர் மற்றும் வனஜா(68), மனோஜ்குமார்(49), கவிதா(38), மணிகண்டன் ஆகியோர் காயத்துடன் மீட்கப்பட்டனர். இடிபாடுக்குள் கஸ்தூரிபாய் என்ற 65 வயது மூதாட்டி 20 மணி நேர போராட்டத்திற்கு பின் இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.
காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன்(42) என்பவர் இன்று இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.