June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

ஒலியை விட 6 மடங்கு வேகத்தில் பாயும் ஹைபர்சோனிக் வாகனம் – சோதனை ஓட்டம் வெற்றி

1 min read

Hypersonic vehicle that travels 6 times faster than sound – test run success

7-9-2020

இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ஹைபர்சோனிக் வாகன சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. இது ஒலியை விட 6 மடங்கு வேகத்தில் பாயந்து செல்லும் வல்லமை கொண்டது.

ஹைபர்சோனிக் வாகனம்

ராணுவத்திற்கு தேவையான தளவாடங்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
அதன் ஒருபடியாக அதிவேகமாக செல்லும் திறன் கொண்ட ஹைபர்சோனிக் ஏவுகணைகள் தயாரிப்பில் இந்தியா இறங்கி உள்ளது.
ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது.

சோதனை ஓட்டம்

இதற்காக உள்நாட்டிலேயே ஹைப்பர்சோனிக் தொழில்நுட்ப சோதனை வாகனம் (எச்எஸ்டிடிவி) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் இன்று(திங்கட்கிழமை) ஒடிசாவில் உள்ள அப்துல் கலாம் ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 11.03 மணியளவில், அக்னி ஏவுகணை பூஸ்டர் ஹைபர்சோனிக் வாகனத்தை 30 கிரோ மீட்டர் உயரத்திற்கு எடுத்துச் சென்றது. அதன்பிறகு, ஹைபர்சோனிக் வாகனம் தனியா பிரிந்தது. அதன்பின்னர் அதில் உள்ள ஸ்கிராம்ஜெட் என்ஜின் வெற்றிகரமாக இயங்கியது.

ஒலியை விட 6 மடங்கு வேகம்

இதன்மூலம் வாகனம் அதிவேகமாக உந்தப்பட்டு ஒலியின் வேகத்தை விட 6 மடங்கு வேகத்தில் சீறிப் பாய்ந்தது.

இந்த உள்நாட்டு தொழில்நுட்பம் எதிர்காலத்தில் ஒலியின் வேகத்தை விட 6 மடங்கு வேகத்தில் பயணிக்கும் ஏவுகணைகள் தயாரிப்புக்கு வழிவகுக்கும்.

பாராட்டு

இந்த சோதனையை வெற்றிகரமாக நிறைவேற்றிய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திற்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் டுவிட்டர் மூலம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் சுயசார்பு இந்தியாவை எட்டுவதில் இது ஒரு மைல்கல் என்று அவர் கூறி உள்ளார்.

உள்நாட்டில் உருவாக்கிய ஸ்க்ராம்ஜெட் உந்துவிசை முறையை பயன்படுத்தி சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த வெற்றியின் மூலம், அனைத்து முக்கியமான தொழில்நுட்பங்களும் இப்போது அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் என்றும் பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சோதனையின்மூலம் அடுத்த ஐந்து
ஒலியை விட 6 மடங்கு வேகமாக பயணிக்கும் இந்த ஏவுகணைகள் அதிவேகத்தில் அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று தாக்குதல் நடத்தும் சக்தி கொண்டது. ஏவுகணை அமைப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ளும். எந்த அமைப்புகளாலும் தடுக்கவோ, டிராக் செய்யவோ முடியாது.

இதுவரை அமெரிக்கா, சீனா, ரஷ்யா மட்டுமே ஹைபர்சோனிக் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளன. இப்போது அந்த வரிசையில் இந்தியாவும் வந்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.