தமிழகத்தில் ஒரே நாளில் 5,682 பேருக்கு கொரோனா- 6,599 பேர் டிஸ்சார்ஜ்
1 min read
Corona to 6,599 people discharged to 5,682 people in one day in Tamil Nadu
8-9-2020
தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 5,682 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அதே நேரம் 6,599 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா நிலவரம் பற்றி விவரங்களை தினமும் தமிழக சுகாதாரத்து வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று( செவ்வாய்க்கிழமை) மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று( செய்வாய்க்கிழமை) ஒரே நாளில் 5,684 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதில் 5,682 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 2பேர் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் .
இவர்களையும் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,74,940 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 163 ஆய்வகங்களில் 83,266 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதனுடன் சேர்த்து, இவைகளையும் சேர்த்து 54 லட்சத்து 62 ஆயிரத்து 277 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில், 3,310 பேர் ஆண்கள். 2,374 பேர் பெண்கள். கொரோனா பாதித்த ஆண்களின் மொத்த எண்ணிக்கை 2,86,383. பெண்களின் எண்ணிக்கை 1,88,528. மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29.
டிஸ்சார்ஜ்
கொரோனா பாதித்தவர்களில் இன்று மட்டும் 6,599 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின்மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 16 ஆயிரத்து 715 ஆக உள்ளது.
தமிழகத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) மட்டும் கொரோனாவுக்கு 87 பேர் இறந்தனர். இவர்களில் 44 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 43 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவர். இவர்களை சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 8,012 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது பல்வேறு ஆஸ்பத்திரிகளில் 50,213 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சென்னையில்…
சென்னையில் மட்டும் இன்று 988 பேருக்கு கொரோனா கண்டறியப்படடு உள்ளது. சென்னையை தவிர கோவையில் 446 பேருக்கும், கடலூரில் 407 பேருக்கும், செங்கல்பட்டில் 364 பேருக்கும், திருவள்ளூரில் 277 பேருக்கும், திருவண்ணாமலையில் 242 பேருக்கும், திருவாரூரில் 198 பேருக்கும், சேலத்தில் 164 பேருக்கும், வேலூரில் 148 பேருக்கும், திருப்பூரில் 142 பேருக்கும் இன்று கொரோனா கண்டறிப்பட்டு உள்ளது.
நெல்லை
திருநெல்வேலி மாவட்டத்தில் 135 பேருக்கும் தென்காசி மாவட்டத்தில் 74 பேருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் 62 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டது.
இன்று சென்னையில் 18 பேரும், கடலூரில் 9 பேரும், சேலம், வேலூரில் தலா 6 பேரும், காஞ்சிபுரத்தில் 5 பேரும், திருவள்ளூரில் 4 பேரும், செங்கல்பட்டு, திண்டுக்கல், விழுப்புரத்தில் தலா 3 பேரும், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, தேனி, திருவண்ணாமலை, திருநெல்வேலி, விருதுநகரில் தலா 2 பேரும், அரியலூர், கரூர், மதுரை, நாமக்கல், ராமநாதபுரம், திருவாரூர், தூத்துக்குடி, திருச்சியில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
சென்னையில் இன்று கொரோனாவில் இருந்து1,097 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் ஆனார்கள். கோவையில் 1,087 பேரும், சேலத்தில் 552 பேரும், செங்கல்பட்டில் 392 பேரும், கடலூரில் 346 பேரும், விழுப்புரத்தில் 324 பேரும், திருவள்ளூரில் 232 பேரும், ஈரோடில் 226 பேரும், காஞ்சிபுரத்தில் 194 பேரும் டிஸ்சார்ஜ் ஆனார்கள்.
மாவட்ட வாரியாக…
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வருமாறு:-
அரியலூர் – 45
செங்கல்பட்டு – 364
சென்னை – 988
கோவை – 446
கடலூர் – 407
தர்மபுரி – 58
திண்டுக்கல் – 95
ஈரோடு – 121
கள்ளக்குறிச்சி – 138
காஞ்சிபுரம் – 122
கன்னியாகுமரி – 95
கரூர் – 46
கிருஷ்ணகிரி – 83
மதுரை – 110
நாகை – 21
நாமக்கல் – 94
நீலகிரி – 76
பெரம்பலூர் – 15
புதுக்கோட்டை – 116
ராமநாதபுரம் – 31
ராணிப்பேட்டை – 121
சேலம் – 164
சிவகங்கை – 48
தென்காசி – 74
தஞ்சாவூர் – 128
தேனி – 90
திருப்பத்தூர் – 49
திருவள்ளூர் – 277
திருவண்ணாமலை – 242
திருவாரூர் – 198
தூத்துக்குடி – 62
திருநெல்வேலி – 135
திருப்பூர் -142
திருச்சி – 98
வேலூர் – 148
விழுப்புரம் – 126
விருதுநகர் – 109.