கடன் மோசடி வழக்கில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி முன்னாள் அதிகாரியின் கணவர் கைது
1 min read
ICICI Bank in small loan fraud case Husband of former bank officer arrested
8-9-2020
கடன் மோசடி வழக்கில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சந்தா கோச்சாருடைய கணவர் தீபக் கோச்சார் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோசடி
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தவர் சந்தா கோச்சார். இவர் பதவியில் இருந்தபோது, வங்கி விதிமுறைகளை மீறி, வீடியோகான் குழுமத்துக்கு ரூ.1,875 கோடி கடன் வழங்கியதாக கூறப்படுகிறது. அதற்குப் பிரதிபலனாக, சந்தா கோச்சாருடைய கணவர் தீபக் கோச்சாருக்குச் சொந்தமான நியூபவர் ரினியூவபிள்ஸ் நிறுவனத்தில், வீடியோகான் குழுமம் முதலீடு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடா்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கின் அடிப்படையில், சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
கைது
இந்த வழக்கு தொடரப்பட்டு ஓராண்டு ஆன நிலையில், தீபக் கோச்சார் நேற்று (செய்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டார். இதுபற்றி அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் தீபக் கோச்சாரை மும்பையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். வழக்கு தொடர்பாக கிடைத்த புதிய ஆதாரங்களின் அடிப்படையில் அவரை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு தீபக் கோச்சார் கைது செய்யப்பட்டார். ” என்றார்கள்.