தமிழகத்தில் ஒரே நாளில் 5,522 பேருக்கு கோரோனா ; 6.185 பேர் டிஸ்சார்ஜ்
1 min read
Corona for 5,522 people in one day in Tamil Nadu; 6.185 discharged
10-89-2020
தமிழகத்தில் இன்று ஒரே 5,522 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதே நேரம் 6,185 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
கொரோனா
தமிழ் நாட்டில் கொரோனா பரவல் பற்றிய விவரங்களை தமிழக சுகாதாரத்துறை தினமும் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று ( வியாழக்கிழமை) வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) ஒரே நாளில் 5,528 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அதில், 5,522 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 6 பேர் வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். இவர்களையும் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை 4,86,052 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 163 ஆய்வகங்களில் 85,473 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவைகளுடன் சேர்த்து, இதுவரை 56 லட்சத்து 30 ஆயிரத்து 323 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
டிஸ்சார்ஜ்
இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில், 3,377 பேர் ஆண்கள். 2,151 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 2,93,154 . பெண்களின் மொத்த எண்ணிக்கை 1,92,869 . மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29.
தமிழ்நாட்டில் இன்று மட்டும் 6,185 பேர் கொரோனாவில் இருந்து விடுபட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து இதுவரை கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 29 ஆயிரத்து 416 ஆக உள்ளது.
64 பேர் சாவு
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 64 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 42 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 22 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,154 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 48,482 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இவ்வாறு தமிழக சுகாதரத்துறை கூறியுள்ளது.