June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

நடிகை வனிதா தனது 3-வது கணவருடன் ரூபாய் மாலை அணிந்து பூஜை

1 min read

Actress Vanitha prays with her 3rd husband wearing a rupee garland

11-9-2020

நடிகை வனிதா விஜயகுமார், தனது 3-வது கணவர் பீட்டர் பாலுடன் கழுத்தில் ரூபாய் மாலை அணிந்து வீட்டில் சிறப்பு பூஜை நடத்தி இருக்கிறார்.

நடிகை வனிதா

நடிகை வனிதா விஜயகுமார் சில மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்துக் கொண்டார். பீட்டர் பாலுக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தையும் உள்ளனர். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை மணந்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பீட்டர் பாலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து பீட்டர் பால் வீடு திரும்பி இருக்கும் நிலையில், வீட்டில் சிறப்பு பூஜை நடத்தி இருக்கிறார் வனிதா.

பூஜை

இரண்டு மகள்களுடன் வனிதா, பீட்டர் பால் இருவரும் கழுத்தில் ரூபாய் மாலையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார். தனது லட்சுமி குபேர பூஜை நடந்ததாகவும் 2020 ஆம் ஆண்டின் இனி வரக்கூடிய மாதங்களாவது அனைவருக்கும் நல்லதாக இருக்கட்டும் என்றும் இந்த ஆண்டை தன்னால் மறக்கவே முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.