நீட் தேர்வுக்காக நெல்லை, தென்காசி மாவட்டத்தில் 20 மையங்கள் விவரம்
1 min read
Details of 20 centers in Nellai, Tenkasi district for NEET examination
11-9-2020
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நீட் தேர்வுக்கான 20 மையங்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளன.
நீட் தேர்வு
மருத்துவ படிப்புக்கான நீட் என்ற நுழைவுத் தேர்வு இந்தியா முழுவரும் வருகிற 13-ந் தேதி நடக்கிறது.
இதில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் பொது நுழைவுத் தேர்விற்காக 20 தேர்வு மையங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் 7460 பேர் தேர்வு எழுத உள்ளார்கள்.
இதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மத்திய அரசாங்கத்தால் திருநெல்வேலி மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் பொது நுழைவுத் தேர்வு 13.9.2020 அன்று பிற்பகல் 2 முதல் மாலை 5 வரை திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 17 தேர்வு மையங்களிலும் தென்காசி மாவட்டத்தில் 3 தேர்வு மையங்களிலும் ஆக மொத்தம் 20 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.
மையங்கள் விவரம்
நெல்லை மாவட்ட 17 தேர்வு மையங்கள் வருமாறு:-
1.சாரதா மகளிர் கல்லூரி, சாரதா நகர், அரியகுளம், மகாராஜ நகர் அஞ்சல், திருநெல்வேலி.
- புஷ்பலதா வித்யா மந்திர், சிவந்திபட்டி ரோடு, தியாகராஜ நகர், மின் அலுவலகம் அருகில், திருநெல்வேலி.
- ஜான்ஸ் உயர்நிலைப் பள்ளி, 5, மார்க்ஸ் ரோடு, எஸ்.பி. அலுவலகம் அருகில், பாளையங்கோட்டை-
- சாரா டக்கர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சாரா டக்கர் பள்ளிக்கூட தெரு, கட்நாயக்கன், பாளையங்கோட்டை.
- பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி, 103, ஜி2, பைபாஸ் ரோடு, ஆப்பிள் ட்ரீ ஓட்டல் அருகில், வண்ணார்பேட்டை, திருநெல்வேலி.
- ஸ்ரீ ஜெயந்திரா சுவாமிகள் சில்வர் ஜுபிலி மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி, சி 107, 4வது குறுக்குத் தெரு, மகாராஜ நகர், திருநெல்வேலி.
- ராஜாஸ் பொறியியல் கல்லூரி, ராஜா நகர், வடக்கன்குளம், காவல்கிணறு அருகில், இராதாபுரம், திருநெல்வேலி.
- புனித அந்தோணி பப்ளிக் பள்ளி, வி.எம்.சத்திரம், மகாராஜ நகர் அஞ்சல், பாளையங்கோட்டை.
- ஸ்ரீ ஜெயந்திரா சுவாமிகள் கோல்டன் ஜுபிலி மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி, தென்கலம்புதூர், சங்கர் நகர், தாழையூத்து, மின் அலுவலகம் அருகில், திருநெல்வேலி. 11. எஸ்.ஏ.வி.பாலகிருஷ்ணன் முதுநிலை உயர்நிலைப் பள்ளி, சத்தியம் நகர், குமாரபுரம் ரோடு, வடக்கன்குளம், இராதாபுரம், திருநெல்வேலி.
- பிரான்சிஸ் சேவியர் பள்ளி (சி.பி.எஸ்.சி), 103, ஜி2, பைபாஸ் ரோடு, ஆப்பிள் ட்ரீ ஓட்டல் அருகில், வண்ணார்பேட்டை, திருநெல்வேலி.
13 ஐன்ஸ்டீன் அறிவியல் மற்றும் கலைக் கல்லூரி, சர்.சி.வி.இராமன் நகர், சீதபற்பநல்லூர், திருநெல்வேலி. - ரோஸ் மேரி பப்ளிக் பள்ளி, வி.எம்.சத்திரம், தூத்துக்குடி மெயின் ரோடு, திருநெல்வேலி.
- வி.எஸ்.ஆர்.இன்டர்நேஷனல் பள்ளி, 5-147-3, கல்யாணி நகர், இடையன்குடி ரோடு, திசையன்விளை.
- கேம்பிரிட்ஜ் பள்ளி, 368/1, அருணாச்சல மெடோஸ், நாரணம்மாள்புரம், சங்கர் நகர் அஞ்சல், திருநெல்வேலி.
- ஸ்காட் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, ஸ்காட் நகர், சேரன்மகாதேவி.
- புஷ்பலதா மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி, சிவந்திபட்டி ரோடு, தியாகராஜ நகர், திருநெல்வேலி.
தென்காசி மாவட்டம்
தென்காசி மாவட்டத்தில் உள்ள 3 தேர்வு மையங்கள் வருமாறு:-
- ஏ.வி.கே.இன்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளி, 188, இராஜபாளையம் மெயின்ரோடு, சங்கரன்கோவில்.
- வெல்ஸ் பப்ளிக் பள்ளி, வெல்ஸ் நகர், வடக்கு புதூர், சங்கரன்கோவில்.
- வேல்ஸ் வித்யாலயா, வேலம்மாள் சதுக்கம், திருமலாக்கோவில் மெயின்ரோடு, இலத்தூர், செங்கோட்டை.
கூடுதல் பஸ்கள்
தேர்வு நாளன்று தடைபடாத மின்சாரம் வழங்கவும், பேரூந்துகளை தேர்வு மையத்திற்கு கூடுதலாக இயக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்திரவிடப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் கல்வி நிலையத்திற்கு காவல் துறை மூலம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திடவும் தேர்வு நடைபெறும் மையத்தின் அருகில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் வைத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்வு எழுதுவோர் தங்களின் தேர்வு மையங்களை கண்டறிந்து முன்கூட்டியே தேர்வு எழுத வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், தேர்வு அறையினுள் செல்போன்களை எடுத்துச் செல்லக்கூடாது. தேர்வு எழுதுபவர்கள் தவிர இதர நபர்கள் தேர்வு மைய வளாகத்திற்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.