மருந்துக்காக கோமியத்தை குடிக்கும் இந்தி நடிகர் அக்ஷய்குமார்
1 min read
Akshay Kumar is a Hindi actor who drinks comedy for medicine
12-9-2020
மருத்துவ காரணங்களுக்காக தினமும் பசு கோமியத்தை குடிப்பதாக இந்தி நடிகர் அக்ஷய்குமார் கூறியுள்ளார்.
அக்ஷய் குமார்
ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக நடித்தவர் அக்ஷய்குமார். இந்தியில் முன்னணி நடிகராக விளங்குகிறார். தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கி உள்ள காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கான லட்சுமி பாம் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் டிஸ்கவரி சேனலில் பிரபலமாக உள்ள மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் அக்ஷய்குமார் பங்கேற்று உள்ளார்.
இதன் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் மற்றும் அக்ஷய்குமார் பங்கேற்ற படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் பந்தியூர் வனப்பகுதியில் நடந்தபோது பியர் கிரில்ஸ் யானை சாணத்தில் டீ போட்டு கொடுத்ததை அக்ஷய்குமார் குடித்துள்ளார்.
பெல்பாட்டம் இந்தி படப்பிடிப்புக்காக ஸ்காட்லாந்தில் முகாமிட்டுள்ள அக்ஷய்குமார் இன்ஸ்டாகிராம் நேரலையில் கலந்துரையாடியபோது யானை சாணத்தில் டீ குடிக்க உங்களை பியர் கிரில்ஸ் எப்படி சம்மதிக்க வைத்தார் என்று நடிகை கியூமா குரோஷி கேள்வி எழுப்பினார்.
கோமியம்
அதற்கு பதில் அளித்த அக்ஷய்குமார் “பியர் கிரில்ஸ் அதை குடிக்க சொன்னதும் நான் கவலை கொள்ளவில்லை. மகிழ்ச்சி அடைந்தேன். காரணம் நான் தினமும் ஆயுர்வேத மருத்துவ காரணங்களுக்காக பசு கோமியத்தை குடித்து வருகிறேன். எனவே யானை சாணத்தில் போட்ட தேநீரை அருந்துவது பிரச்சினையாக தெரியவில்லை” என்றார்.