இந்தியால் ஒரே நாளில் 81,533 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்
1 min read
India recovered 81,533 people from Corona in one day
12-9-2020
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 81,533 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி மீண்டுள்ளனர்.
கொரோனா
இந்தியாவில் கொரோனா இன்னும் மக்களை பாடாய் படுத்துகிறது. கொரோனா நிலவரத்தை தினமும் காலையில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று ( சனிக்கிழமை) மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று(வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் 97,570 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மொத்த எண்ணிக்கை 46 லட்சத்து 59 ஆயிரத்து 985 ஆக உயர்ந்தது.
டிஸ்சார்ஜ்
இந்தியா முழுவதும் நேற்று மட்டும் 1,201 கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இதுவரை மொத்தம் 77,472 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
நேற்று மட்டும் கொரோனாவில் இருந்து 81,533 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை 36 லட்சத்து 24 ஆயிரத்து 197 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தற்போது 9 லட்சத்து 58 ஆயிரத்து 316 பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.