June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

நீட் தேர்வுக்கு பயந்து மதுரை மாணவி தற்கொலை

1 min read

Madurai girl commits suicide for fear of NEET exam

12-8-2020

‘நீட்’ தேர்வுக்கு பயந்து மதுரை மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை

ஒரு காலத்தில் பள்ளி இறுதி தேர்வில் தோல்வி அடைந்தால் சில மாணவ-மாணவிகள் தற்கொலை கொள்வார்கள். தற்போது மதிப்பெண் குறைந்தாலே விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
இப்போது நீட் தேர்வுக்கு பயந்தோ, அல்லது நீட் தேர்வில் போதிய மதிப்பெண் கிடைக்கவில்லை என்றாலோ சிலர் தற்கொலை முடிவுக்கு செல்கிறார்கள். இதற்காக எத்தனையோ விழிப்புணர்வு பிரசாரம் செய்தாலும் ஆங்காங்கே தற்கொலை சம்பவங்கள் நடந்து வருகின்றன.

மதுரை மாணவி

இப்போது நீட் தேர்வுக்கு பயந்து மதுரை மாணவி தற்கொலை செய்துள்ளார். அந்த மாணவியின் பெயர் ஜோதி ஸ்ரீ துர்கா(19). மதுரை ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்த முருகசுந்தரம் என்பரின் மகள். முருகசுந்தரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக இருக்கிறார். இவர்களது குடும்பம் 6வது சிறப்பு பட்டாலியன் குடியிருப்பில் வசித்து வருகிறது.

ஜோதி ஸ்ரீ துர்கா நீட் தேர்வுக்கு விண்ப்பித்து பயிற்சி எடுத்து வந்தார். நாளை(ஞாயிற்றுக்கிழமை) நீட் தேர்வு நடைபெறும் நிலையில், தேர்வில் வெற்றி பெறுவோமா என்ற பயத்தில், மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா, இன்று( சனிக்கிழமை) அதிகாலை தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


இது பற்றிய தகவல் கிடைத்ததும் ரிசர்வ் லைன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவியின் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.