5 மாதங்களுக்குப் பிறகு செங்கோட்டையில் இருந்து சிலம்பு எக்ஸ்பிரஸ் இயக்கம்
1 min read
Silambu Express movement from Red Fort after 5 months
12-9-2020
செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு 5 மாதங்களுக்குப் பிறகு சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டது.
நிறுத்தம்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24 -ந் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு. இதனால் பஸ் மற்றும் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஊரடங்கில் படிப்படியாக அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் இப்போதுதான் ரெயில் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக எல்லா ரெயில்களும் சிறப்பு ரெயிலாக விடப்படுகிறது.
சிலம்பு எக்ஸ்பிரஸ்
சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு தென்காசி வழியாக செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று ( சனிக்கிழமை) இயக்கப்பட்டது.
வழக்கமாக 23 பெட்டிகள் வரை இயக்கப் படும் எக்ஸ்பிரஸ், 17 பெட்டிகளுடன் புறப்பட்டு சென்றது. செங்கோட்டை யில் இருந்து 108 பேரும், தென்காசியில் இருந்து 257 பயணிகளும் பயணம் செய்தனர். 600 முதல் 700 வரை படுககை வசத கொண்ட சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலின் அனைத்து இருக்கைகளும் முன் பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்பதிவு
வழக்கமாக எக்ஸ்பிரஸ் ரெயில்களில் இரண்டு அல்லது மூன்று முன்பதிவில்லாத பெட்டிகள் இயக்கப்படுவது வழக்கம். நேற்று புறப்பட்ட சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படவில்லை. முன்பதிவில்லாத பெட்டிகளுக்கு பதிலாக இருக்கை வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தது. மேலும் மாற்றுத் திறனாளிகள், பெண்கள் பயணம் செய்யும் பெட்டிகளும் இருக்கை வசதி கொண்ட பெட்டிகளாக இணைக்கப் பட்டிருந்தது.