ஆலங்குளம் அருகே காதல் ஜோடி விஷம் குடித்தது; பெண் சாவு
1 min read
Romantic couple near Alangulam drank poison; Female death
13-9-2020
ஆலங்குளம் அருகே திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் விஷம் குடித்தனர். இதில் பெண் இறந்து போனார்.
காதலுக்கு எதிர்ப்பு
ஆலங்குளம் அருகே சீதபற்பநல்லூரை அடுத்த வெட்டுவான்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணிமுத்து.
இவரது மகள் சந்தனமாரி (வயது 19). இவருக்கும் அதே பகுதியில் உள்ள சிறுக்கன் குறிச்சியை சேர்ந்த பேச்சி துரை (27) என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவர் வீட்டிலும் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
விஷம் குடித்தனர்
இதைத்தொடர்ந்து கடந்த 9-ம்தேதி காதலர்கள் இருவரும் ஜோடியாக விஷம் குடித்தனர். உயிருக்கு போராடிய இருவரையும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் சந்தனமாரி பரிதாபமாக இறந்தார். பேச்சிதுரைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக சீதபற்ப நல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நிச்சயதார்த்தம் நின்றதால் வாலிபர் தற்கொலை
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கண்ணநல்லூரை சேர்ந்தவர் ஜோசப் சிங்கராஜா (வயது 26). இவர் அப்பகுதியில் இருசக்கர வாகனங்கள் பழுதுபார்க்கும் கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்து பெண் பார்த்தனர். இன்னும் 2 நாட்களில் நிச்சயம் செய்ய முடிவு செய்தனர்.
இந்த நிலையில் ஜோசப் சிங்கராஜை பற்றி சிலர் பெண் வீட்டில் தவறாக கூறியதாக தெரிகிறது.
இதனால் பெண் வீட்டார் நிச்சய தார்த்தத்தை நிறுத்தி விட்டனர்.
இதில் மனமுடைந்த ஜோசப் சிங்கராஜ் தற்கொலை செய்ய முடிவு செய்தார். அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை தின்றதாக கூறப்படுகிறது. இதனால் மயங்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.