சொப்னாவுடன் அமைச்சரின் மகனுக்கும் தொடர்பு -புகைப்படம் வெளியானதால் பெரும் பரபரப்பு
1 min read
13.9.2020
The minister’s son also had an affair with Sopna – a great sensation as the photo was releasedதிருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சல் வழியாக தங்கம் கடத்திய சம்பவத்தில் நாளுக்குநாள் பரபரப்பு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. ஏற்கனவே இந்த வழக்கில் சொப்னா, சரித்குமார், சந்தீப் நாயர், ரமீஸ் உட்பட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ, சுங்க இலாகா மற்றும் மத்திய அமலாக்கத்துறை ஆகிய 3 அமைப்புகளும் மிகத்தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றன. இந்த விசாரணையில் தங்க கடத்தல் கும்பலுடன் கேரள ஆளுங்கட்சியை சேர்ந்த முக்கிய நபர்களுக்கும் தொடர்பு இருப்பது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கிடையே கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஜலீல், அமீரக தூதகர பார்சலில் குரான் கொண்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பார்சல்களில் குரான் மட்டுமல்லாது தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்ஸிகள் கடத்தப்பட்டிருக்கலாம் என விசாரணை அமைப்புகள் கருதுகின்றன. இதையடுத்து முதற்கட்டமாக நேற்று முன்தினம் அமைச்சர் ஜலீலிடம் மத்திய அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இதையடுத்து அமைச்சர் ஜலீல் பதவி விலகக்கோரி கேரளாவில் போராட்டம் வெடித்துள்ளது.
இந்த நிலையில் அமைச்சர் ஜலீல் அளித்த பதில்களில் பல முரண்பாடுகள் இருப்பதாக கருதப்படுவதால் மீண்டும் அவரிடம் விசாரணை நடத்த மத்திய அமலாக்கத்துறை தீர்மானித்துள்ளது. மேலும் சுங்க இலாகா மற்றும் என்ஐஏவும் அமைச்சர் ஜலீலிடம் விரைவில் விசாரணை நடத்தலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே தங்கராணி சொப்னாவுக்கும், கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் கோடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷ் கோடியேறிக்கும் தொடர்பு இருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது மட்டுமல்லாமல் பெங்களூருவில் கைது செய்யப்பட்ட, போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த முகமது அனூபுக்கும், பினீஷ் ேகாடியேறிக்கும் தொடர்பு இருப்பதும் அம்பலமாகி உள்ளது.
முகமது அனூபுடன் பணம் கொடுக்கல் வாங்கல் என மிக நெருங்கிய பழக்கம் பினீஷ் கோடியேறிக்கு இருந்துள்ளது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய அமலாக்கத்துறை பினீஷ் கோடியேறியிடம் விசாரணை நடத்தியது. இதில் முகமது அனூபுக்கு லட்சக்கணக்கில் கொடுத்த பணம் எங்கிருந்து வந்தது என அதிகாரிகள் கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு பினீஷ் கோடியேறி சரியாக பதிலளிக்காமல் எஸ்கேப் ஆகியுள்ளார். இதனால் அவரிடம் மீண்டும் மத்திய அமலாக்கத்துறை விசாரணை நடத்த உள்ளது.
இந்த நிலையில் சொப்னாவுடன் கேரள அமைச்சர் ஒருவரின் மகனுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது தற்போது வெளிவந்து பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. துபாயில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனம், கேரள அரசின் ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுக்கும் ‘லைப் மிஷன்’ திட்டத்துக்கு ₹20 கோடியை நன்கொடையாக வழங்கியது.
இதையடுத்து வடக்காஞ்சேரி என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இதற்காக ஒப்பந்தம் எடுத்த 2 நிறுவனங்கள், ₹4 கோடியை கமிஷனாக கொடுத்துள்ளன. இந்த தொகையை ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள 2 பேர் உட்பட சிலருக்கு சொப்னா பங்குபோட்டு கொடுத்துள்ளார். இதில் ஒருவர் கேரள அமைச்சரின் மகன் என தற்போது தெரியவந்துள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் வைத்து சொப்னா அந்த பணத்தை அமைச்சரின் மகனுக்கு கொடுத்துள்ளார். இதில் ஒருவர் இடைத்தரகராகவும் செயல்பட்டுள்ளார். இவர்கள் 3 பேரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் விசாரணை அமைப்புகளிடம் சிக்கியுள்ளது.
இடைத்தரகராக செயல்பட்டவருக்கு ₹30 லட்சம் ெகாடுப்பதாக அமைச்சரின் மகன் பேசியிருந்தாராம். ஆனால் அதை அமைச்சரின் மகன் கொடுக்காமல் டிமிக்கி கொடுத்து விட்டார். இதனால் விரக்தியின் உச்சிக்கு சென்ற அந்த இடைத்தரகர், சொப்னா மற்றும் அமைச்சரின் மகனுடன் எடுத்த புகைப்படத்ைத வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து விரைவில் அமைச்சரின் மகனிடமும் விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிகிறது.