June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

நடிகர் சூர்யா மீது நடவடிக்கை தேவையில்லை; 6 முன்னாள் நீதிபதிகள் கடிதம்

1 min read

No action is required on actor Surya; Letter from 6 former judges

14-9-2020

நடிகர் சூர்யா மீது நடவடிக்கை தேவையில்லை என்று 6 முன்னாள் நீதிபதிகள் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

சூர்யா பிரச்சினை

நீட் தேர்வுக்கு பயந்து 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கையில் “கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது” என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு , “நீதிமன்றத்துக்கு எதிராக கருத்து கூறியதற்காக, சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நீதிபதி சுப்பிரமணியம் கடிதம் எழுதியிருந்தார்.
அதே நேரம் முன்னாள் நீதிபதிகள் 6 பேர் சூர்யாவுக்கு ஆதரவாக கடிதம் எழுதி உள்ளனர்.
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு, முன்னாள் நீதிபதிகள் சந்துரு, பாட்ஷா, சுதந்திரம், கண்ணன், ஹரிபரந்தாமன் மற்றும் அக்பர் அலி ஆகிய 6 பேரும் எழுதியிருக்கும் கடிதத்தில், “தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்க சூர்யா மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளனர்.

அவசியம் இல்லை

மேலும், மாணவர்கள் பலியானதால், சூர்யாவின் கருத்துக்களை பெரியதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பது அவசியமல்ல எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.