மாணவர்கள் தற்கொலைக்கு தி.மு.க.தான் காரணம்; எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
1 min read
DMK responsible for student suicides; Edappadi Palanisamy speech
15-9-2020
நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு தி.மு.க. தான் காரணம் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாமி பழனிசாமி பேசினார்.
கவன ஈர்ப்பு தீர்மானம்
நீட் தேர்வு தொடர்பாக சட்டசபையில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது அவர் பேசியதாவது:-
நீட் தேர்வுக்கு எதிராக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த தீர்மானத்திற்கு இதுவரை ஒப்புதல் வாங்கவில்லை. தற்போது நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். கருணாநிதி, முதல்-அமைச்சராக இருந்த வரை , தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்படவில்லை.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
எடப்பாடி பழனிசாமி
இதற்கு பதில் அளிக்கும் வகையில் முதல்-அசை்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. அங்கம் வகித்த போது தான் நீட் தேர்வுக்கான சட்டம் கொண்டு வரப்பட்டது. 2010-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டம் காரணமாக, தற்போது நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வு கொண்டு வரப்பட்ட போது, காங்கிரஸ் கூட்டணியில் இருந்தது யார்? தேர்வை அறிமுகப்படுத்தியது யார் என்பதை நாடே அறியும்.
தி.மு.க.தான் காரணம்
நீட் தேர்வில் 13 மாணவர்களின் தற்கொலைக்கு தி.மு.க. தான் காரணம். கூட்டணியில் இருந்து தி.மு.க. நாட்டை குட்டி சுவராக்கியுள்ளது இதனால் தான் 13 பேர் மரணமடைந்துள்ளனர். நீட் எப்போது யார் ஆட்சியில் வந்தது? யார் அறிமுகப்படுத்தினார்கள்? பதில் சொல்லுங்கள். இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.