தமிழகத்தில் இன்று 5,652 பேருக்கு கொரோனா பாதிப்பு; 5,735 பேர் டிஸ்சார்ஜ்
1 min read
Corona affects 5,652 people in Tamil Nadu today; 5,735 discharged
16-9-2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,652 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் 5,735 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா கொரோனா நிலவரம் குறித்த தகவல்களை தினமும் தமிழக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று ( புதன் கிழமை) மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) ஒரே நாளில் 5,652 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இதில், 5,645 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 7 பேர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் . இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,19,860 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 170 ஆய்வகங்களில் 84,567 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவைகளுடன் சேர்த்து, இதுவரை 61 லட்சத்து 33 ஆயிரத்து 399 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
டிஸ்சார்ஜ்
இன்று கொரோனா உறுதியானவர்களில் 3,489 பேர் ஆண்கள். 2,163 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 3,13,327. பெண்களின் எண்ணிக்கை 2,06,504. மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29.
தமிழகத்தில் இன்று மட்டும் 5,768 பேர் கொரேனாாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் கொரோனாவில் இருந்து மீண்டவர்ளின் எண்ணிக்கை 4 லட்சத்து 64 ஆயிரத்து 668 ஆக உள்ளது.
57 பேர் சாவு
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 57 பேர் இறந்துள்ளனர். இதில்34 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும் 23 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்வர்கள் ஆவர். இவர்கயைும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு மொத்தம் 8,559 பேர் இறந்துள்ளனர்.
தற்போது 46,633 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் உள்ளனர். இதில் 12 வயது வரை உள்ள சிறுவர்-சிறுமிகள் 22 ஆயிரத்து 218 பேர்.
13 முதல் 60 வரை உள்ளவர்கள் 4 லட்சத்து 29 ஆயிரத்து 796 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 67 ஆயிரத்து 846 பேர். மேற்கண்ட தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.